காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ள விஷ்ணு பகவானின் வராக அவதார மூர்த்தியின் சிற்பம்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ள விஷ்ணு பகவானின் வராக அவதார மூர்த்தியின் சிற்பம்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள இந்து பௌத்த சிங்கசாரி கோவிலில் இருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சதுர்புஜ பைரவரின் கற்சிற்பம். நான்கு கரங்களில் சூலம் உடுக்கை குத்துவாள் மற்றும் உடைந்த கபாலம் ஏந்தியுள்ளார். முண்டமாலையுடன் கபாலத்தின் மீது தன் வாகனமான நாயுடன் கம்பீரமாக நிற்கின்றார்.
பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம். இடம் தேசிய அருங்காட்சியகம். இந்தோனேசியா.
மண்டை ஓடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் விநாயகரின் 13 ஆம் நூற்றாண்டு சிற்பம். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிங்கோசரி என்ற இந்து கோயிலில் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் லைடன் வோல்கன்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ளது.
கபால சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள கணங்களின் அதிபதி கணபதி. இடம் தேசிய அருங்காட்சியகம் பாங்காக்.
சங்கு நாராயண பெருமாள் திருக்கோவில் பக்தாப்பூர் நேபாளம்.
ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் ஒர் அரிய சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.
தர்மசாலா ஜெய்பூர் நகரை சேர்ந்தது வராஹ அவதார சிற்பம். இந்த 10 ஆம் நூற்றாண்டு காலத்தைக் கொண்ட இந்த சிற்பம் தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில அருங்காட்சியகத்தில் உள்ளது.
தெய்வீக மயில் வாகனத்தின் மீது அமர்ந்துள்ள மயில்வாகனன். இடம்: திரிலோசனேஸ்வரர் கோவில் திரிலோச்சனபாதா, ஜஜ்பூர் டவுன், ஒடிசா மாநிலம்.
ஸ்ரீகிருஷ்ண பகவானின் காளிங்க நர்த்தனர் மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பம். இடம் தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் உள்ள சத்திய சரணாலயம்.