பாத நமஸ்காரம்

நாம் யார் காலிலோ விழுந்து வணங்குவது அல்ல பாத நமஸ்காரம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பாதத்தை பகவானுடைய தொண்டிற்கு உபயோகப்படுத்தினால் அதற்கு பாத நமஸ்காரம் செய்கிறாய் என்று அர்த்தம். சுவாமி காலில் விழுந்து சுவாமிக்கு என்ன ஆகணும்? உலகத்தில் சுவாமியின் பாதம் இல்லாத இடமே இல்லை. உலகம் பூரா சுவாமியின் கண், கைதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருப்பாதங்கள், எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருக்கரங்கள். சுவாமி கொடுத்திருக்கிற கண்களைக் கொண்டு அனைத்தையும் கடவுளைப் பார்க்க வேண்டும். காதுகளை வைத்துக் கொண்டு கேட்கும் அனைத்தையும் கடவுளுடைய வாசகங்களாகக் கேட்கவேண்டும். கால்களை வைத்துக்கொண்டு நிறைய கோவில்கள் பாத யாத்திரை செல்லவேண்டும். தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். நம்முடைய பாதங்களை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக்கடன் இருக்கிறதே அதுதான் உண்மையான பாத நமஸ்காரம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.