சோழர் காலத்து லிங்கோத்பவ மூர்த்தியின் கிரானைட் சிற்பம். தற்போது இருப்பது அருங்காட்சியகம் பாரிஸ் பிரான்ஸ்.

சோழர் காலத்து லிங்கோத்பவ மூர்த்தியின் கிரானைட் சிற்பம். தற்போது இருப்பது அருங்காட்சியகம் பாரிஸ் பிரான்ஸ்.
ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.
இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.
பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.
சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.
ஒரு சீடன் குருவிடம் தன் சந்தேகத்தை கேட்டான். குருவே வாழ்க்கை இனிமையானதா இல்லை கடுமையானதா? என்றான். அதற்கு அந்த குரு வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது என்று பதிலளிக்க சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் வாழ்க்கையை பற்றி கேட்டால் இவர் பூனையின் பற்களை பற்றி சொல்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சீடனிடம் குரு அதனை விளக்கினார். ஒரு பூனையின் குட்டியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்று கேட்டால் பூனையின் பற்கள் மிக மென்மையானவை இனிமையானவை என்று சொல்லும். பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாரு அக்கறையுடன் அதனை மிகப்பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும். அதே ஒரு எலியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்ற அதே கேள்வியை கேட்டால் ஐயோ பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை என்ற பதில்தான் வரும். பூனையின் பற்களை போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும் என்று விளக்கினார் அந்த துறவி.
ஆணி மாண்டவ்யர் மிகப் பெரிய ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.
அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.
நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார்.
விஷ்ணு பகவான் தனது சகோதரி பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காட்சி ஒற்றைக் கல் தூணில் சிற்பமாக உள்ளது. ஆட்கொண்டநாதர் ஆலயம் இரணியூர் சிவகங்கை மாவட்டம்.