சுசீந்திரம் கோவிலில் உள்ள தூணில் உள்ள இந்த சிலையின் ஒரு காதில் 0.5 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குச்சியை செலுத்தினால் மற்றொரு காது வழியாக குச்சியின் மறுமுனை வெளிவருகிறது.

சுசீந்திரம் கோவிலில் உள்ள தூணில் உள்ள இந்த சிலையின் ஒரு காதில் 0.5 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குச்சியை செலுத்தினால் மற்றொரு காது வழியாக குச்சியின் மறுமுனை வெளிவருகிறது.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-3
பாவமற்ற அர்ஜூனா இந்த உலகில் இரண்டு வகைகள் கொண்ட நிஷ்டைகள் (வழி முறைகள்) முன்பு என்னால் கூறப்பட்டது. இவற்றில் உலக விஷயங்களில் ஈடுபடாமல் ஞானத்தை பிரதானமாக கொண்டவர்களுக்கு சாங்கிய யோகமும் (ஞானயோகம்) உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு கர்ம யோகமும் அமைகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகம் படைக்கப்பட்ட பின் படைக்கப்பட்ட உயிர்கள் அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பலவிதமான தன்மைகளுடன் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப மோட்சத்தை அடைய என்னால் இரண்டு வழி முறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஞான யோகம். இந்த உலக விஷயங்களான பந்தம் பாசம் உறவு செல்வம் என்று எதிலும் ஈடுபடாமல் தான் யார் என்று ஆத்ம விசாரணை செய்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து மோட்சம் அடைபவர்கள். இவர்கள் ஞான யோகத்தின் வழி செல்பவர்கள். இரண்டு கர்ம யோகம். ஆசைகளின் விளைவாக உலக பற்றுகளில் மாட்டிக் கொண்டு புலன்களின் வழியாகச் சென்று உலக விஷயங்களில் ஈடுபட்டு செல்வார்கள். ஆசைகளினால் தனது புலன்களின் வழியாக அவர்கள் சென்றாலும் அதனை பற்றில்லாமல் செல்ல வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டது கர்ம யோகம் ஆகும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:
அர்ஜூனனை ஏன் பாவமற்ற அர்ஜூனா என்று கிருஷ்ணர் அழைக்கிறார்?
பாவம் உள்ளவன் இறைவனை அடைய இரண்டில் எந்த வழிமுறையிலும் செல்ல தகுதி அற்றவன் ஆகிறான். அர்ஜூனன் பாவமற்றவன் என்று சொல்வதின் வழியாக நான் செய்கிறேன் என்ற பற்றில்லாமல் கர்ம யோகத்தின் படி யுத்தம் செய்து கர்ம யோகத்தை கடைபிடித்து இறைவனை அடைய தகுதி உடையவன் என்று அர்ஜூனன் புரிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கிறார்.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-2
குழப்பமான பேச்சினால் என் புத்தியை தடுமாறச் செய்கிறாய். ஆகையால் எனக்கு நன்மையானது எதுவோ அந்த ஒன்றை தீர்மானமாகச் சொல்லுங்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இவ்வளவு நேரம் நீ என்னிடம் தெளிவாக அறிவுரைகள் சொன்னாலும் அனைத்தையும் கேட்ட என்னுடைய கூர்மையில்லாத புத்தி குழப்பம் அடைந்து உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உன்னுடைய அறிவுரையின் படி ஞானம் கர்மம் இரண்டும் ஓரே நேரத்தில் ஒரு மனிதனால் பின்பற்ற இயலாது. இரண்டில் ஒன்றை மட்டுமே கடைபிடிக்க முடியும் என்றால் நான் எதனை கடைபிடித்தால் மோட்சம் பெறுவேன். எனக்கு சரியான வழியைச் சொல்லுங்கள் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பழமையான புகழ் பெற்ற விஷ்ணு கோவில் ஆகும். இக்கோவில் சூளகிரி மலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள். ஏழு அடி உயரத்தில் மேற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். உத்ராயண காலத்தில் (ஜனவரி நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது. இதனால் இக்கோவில் அஸ்தகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தாயார் பெருந்தேவி மகாலட்சுமி. தனி சன்னதியில் மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் பெருமாளின் காவலனாக அனுமன் இருக்கிறார்.
ஏழு மலை ஏழு கோட்டை ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கற்பகிரக நிலை வாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும் காலப்போக்கில் வளர்ந்து மகா மண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் வரலாறு உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் துவாபர யுகத்தைச் சேர்ந்தது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்ற போது பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த சூளகிரி மலைப் பகுதிக்கு வந்தனர். அப்போது அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. இது பஞ்ச பாண்டவர்கள் ஐவரைக் கூறிக்கிறது. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது. அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள் மற்றும் பாளையக்காரர்கள் விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.












இந்தியாவின் மகாராஷ்டிராவில் இகத்புரி அருகே திரிங்கல்வாடி கோட்டையின் சுவரில் அனுமான் அருள் பாலிக்கிறார்.

