நாராயணன் தனது மனைவி லட்சுமியுடன். இடம் ஹோய்சலேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம்.

நாராயணன் தனது மனைவி லட்சுமியுடன். இடம் ஹோய்சலேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம்.

காசியபர் முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர் தும்புரு. நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும் தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.
ஒரு முறை நாரதர் தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும் மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க பூலோகத்தில் ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர் கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதா வென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து இறுதியில் பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வரமாகப் பெற்றார். அன்று முதல் கோண தீர்த்தம் தும்புருதீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி). இடம்: சக்கரபாணி கோவில் கும்பகோணம்.

யோக நிலையில் அமர்ந்துள்ள சிவன். இடம் கடம்பவனேஸ்வரர் கோவில். எறும்பூர். விருத்தாச்சலம். முதலாம் பராந்தகசோழன் காலம் (கி.பி 907-953)

அடிமுடி காணா அண்ணாமலையாக இறைவன் நிற்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேட பிரம்மா முடியை காண மேலே சென்ற காட்சி. முற்சோழர் கால கலைப் படைப்பு. இடம்: நற்றுணையப்பர் திருக்கோயில். திருநனிப்பள்ளி நாகை மாவட்டம்.

முருகன் தன் தெய்வீக வாகனமான மயில் மீது கம்பீரமாக அமர்ந்துள்ளார். தேவந்திரனும் சூரனும் மயில் வடிவம் கொண்டு அவரை வாகனமாகத் தாங்கியதற்கு முன்பாக ஓங்கார (மந்திரம்) மயில் வடிவுடன் அவருக்கு வாகனமாக இருந்து வந்தது. இவ்வகையில் முருகனுக்கு தேவ மயில் அசுர மயில் இந்திர மயில் பிரணவாகார மயில் எனப் பலவிதமான மயில்கள் வாகனமாக இருக்கின்றன. இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
