கேள்வி: கோயம்பேட்டில் இருக்கும் ஈஸ்வரர் ஆலயத்தைப் பற்றி:
தச பாவம் சரியில்லாத மாந்தர்கள் தொழில் யோகம் வேண்டி எங்கெல்லாம் சென்றும் நற்பலன் இல்லையே? என்று ஏங்கக் கூடியவர்கள் அந்த தோஷம் நீங்கி நல்விதமாய் தொழில் அமைய வழிபட வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இதனை விட கடல் தாண்டி செல்ல வேண்டும் கடல் தாண்டி நல்ல நல்ல தேசங்களில் பணியாற்றி திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார். தீர்த்தம் குசலவ தீர்த்தம். தல விருட்சம் பலா. இடம் சென்னை அருகில் உள்ள கோயம்பேடு. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. லவ குசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் கோயம் பேடு என பெயர் பெற்றது. பேடு என்றால் வேலி எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது கோசைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் சுமார் 25200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடைக்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பெரிய குளம் உள்ளது. இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. கோவிலுக்கு அருகில் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.
ஒரு காலத்தில் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மணலால் மூடிவிட்டது. சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே தேரில் சென்ற போது சக்கரம் லிங்கம் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை அவரது சாரதியான அருணன் ஓட்ட மனைவியருடன் சூரியபகவான் அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள் கீழ்பீடம் வெள்ளை தாமரை பீடம் சிவப்பு ரதம் கருப்பு தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா லட்சுமி ஞானசரஸ்வதி நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர் வீரபத்திரர் இருக்கின்றனர். அதிகார நந்தி காலபைரவர் வீரபத்திரர் விநாயகர் பிரம்மன் சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது.
அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள் லவன் குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே லவ குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் லவ குசர் இருவரும் சென்றார்கள். மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும் சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமர் மீது கோபமடைந்த லவ குசர் இருவரும் தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது அஸ்வமேத யாகக் குதிரை லவ குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப் போட்டனர். அங்கு வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ குசர்களிடம் ராமர் அவர்களது தந்தை என்பதையும் அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமர் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். இருப்பினும் தந்தையை எதிர்த்ததால் லவ குசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றனர். இதனால் சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.
கோயம்பேடு என்ற ஊரும் இல்லை குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை வடக்குப் பார்த்த சிவனும் இல்லை மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.
இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.
இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழமண்டலம் மற்றும் மாங்காடு இப்பகுதியில் இடம் பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. வால்மீகி முனிவர் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அருணகிரிநாதர் இக்கோவில் முருகரை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 25-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
“அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 12-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அகத்தியர் தனது பொது வாக்கில் ராம் என்ற ராமரின் மந்திரத்தை வைத்தே ராமரது வரலாற்றையும் ராமரது தத்துவத்தையும் சொல்லியிருக்கிறார்.
இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம். இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம். இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம்.
ஈகை (தர்ம) குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம். இன்பம் இதுவே என காட்டித் தந்தா ராம்.
இறை கருணை காெண்டாராம் அதனால் உலகை படைத்தா ராம். இறை கருணை காெண்டா ராம். அது போலவே இறை கருணை காெண்டதனால் அது போலவே இறை கருணை காெண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தா ராம்.
இறை கருணை காெண்டா ராம். அது போலவே இறை கருணை காெண்டதனால் இது போலவே ஒவ்வாெரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம்.
இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) திருஷ்டியில் (ஞானப் பார்வையில்) அருளை தருவா ராம். துயரத்தில் தன்னை இணைத்துக் காெள்வா ராம். தாெல்லை வரும் பாெழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பா ராம். அவர் வருவா ராம் நடப்பா ராம் பாேவா ராம் இருப்பா ராம் என்றும் நல் அருளை தருவா ராம். ஆயினும் (ஆனாலும்) இதை உணர்வார் யார்? புரிந்தார் யார்?
இது போலவே இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சாெந்தம் என காெண்டவ ராம். அது போலவே காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை). காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை).
இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) அவர் (அன்னை) என்றும் இருப்பா ராம். அவர் (அன்னையாக) இருந்து இருந்து உயிர்களை காப்பாராம். காத்து காத்து ரட்சித்து அருள்வா ராம். அவர் (அன்னை) என்றும் உயிர்களாேடு பரிவாய் உறுதுணையாய் இருப்பா ராம். அவர் பாேவாராம் வருவா ராம் என்று தாேன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பா ராம். அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பா ராம். அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம். இதை) உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம் (பிரகாசிப்பா ராம்). அவர் என்றும் உயர்ந்தா ராம். அவர் ஒரு பாெழுதும் தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம் (முடியாதாம்). இது போலவே இறை கருணை காெண்டா ராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வாெரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம் (ஆழ்ந்து இருக்குமாம்).
இறை கருணை காெண்டா ராம். இறை கருணை காெண்டா ராம். அதனால் அவர் (ராமர்) வந்தா ராம். அதனால் பிள்ளை என பிறந்தா ராம். அதுவும் நாடு ஆள்வது தாெல்லை என துறந்தா ராம். பிறகு வனம் சென்றா ராம். அது போலவே அங்கு சிலரை கண்டா ராம். அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம். அது போலவே அவர் தன் துணையை பிரிந்தா ராம். அங்கு அவர் கண்டா ராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை. அது போலவே வாயுபுத்திரனை (ஆஞ்சநேயர்) அவர் கண்டா ராம். தாேழமை காெண்டா ராம். அது போலவே அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம். அவர் வாலியின் சாேதரனை (சகோதரனை) ஏற்றி வைத்தா ராம். அதனால் வாலியை மாேட்சத்தில் இறக்கி வைத்தா ராம். அது போலவே அவர் மனிதருக்கும் இறைக்கும் (இறைவனுக்கும்) பாலம் என இருந்தா ராம். அது போலவே) மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம். அது போலவே ஆழியை (கடல்) கடந்தா ராம். அது போலவே ஆழி (கடல்) தாண்டி ஆழி (கடல்) தாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம் மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம். அது போலவே சென்றா ராம். அசுரர் தலை எடுத்தாராம். அது போலவே அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டா ராம். அது போலவே ஆத்மாவை அவர் மீண்டும் சாேதித்து பார்த்தா ராம். அது போலவே மாேட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம். ஆட்சியை தாெடர்ந்தா ராம்.
அது போலவே பஞ்ச (ஐந்து) புலனெல்லாம் விதவிதமாய் அலை கழிக்க ஆத்மா தன்னை அது தாெலைக்க தாெலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு (காற்று) என்று தேட அது போலவே தேடி கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக் காெள்ள அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அதுவே இது இதுவே அது என உணர்ந்தா ராம் உணர்ந்தா ராம். அவரெல்லாம் ராமர் வழி வந்தாராம் வந்தாராம். அது போலவே அப்படி வருவாேரெல்லாம் சிறந்தா ராம் சிறந்தா ராம். அது போலவே சிறந்தாேரெல்லாம் தாெடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் உயர்ந்தா ராம்.
இறை கருணை காெண்டா ராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பாெழிந்தா ராம். அவர் என்றென்றும் இருப்பா ராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பா ராம். இதை உணர்ந்தாேரே உண்மையை உணர்ந்தாே ராம். ஏனையாேர் எல்லாம் தாழ்ந்தாே ராம். எனவே தாழ்ந்தாே ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தாே ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் (மூச்சுக் காற்றுடன்) ராம் ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தாே ராம் என்கிற நிலைக்கு வரும். இது போலவே யாம் இறை அருளால் உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறாேம்.
கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.
ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.
வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.
அகத்தியர் தனது பொது வாக்கில் தூய தமிழில் சொல்லியிருக்கிறார். இதற்கு கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நதியின் சங்கமம் ஆழியாேடு, உயர் நற்றமிழின் சங்கமம் நற்சுவையாேடு, விதித்த விதியின் சங்கமம் அவனவன் செயலாேடு, என்றென்றும் பதியின்(கணவன்) சங்கமம் மெய் பத்தினியாேடு, அவனவன் மதியின் சங்கமம் உயர் குணத்தாேடு, விளைந்த கதியின் சங்கமம் அவனவன் எண்ணத்தாேடு, என்றென்றும் தர்மத்தின் சங்கமம் புண்ணியத்தாேடு, தளர்வில்லா மனதின் சங்கமம் இறையாேடு, தப்பில்லா வாழ்வும் வளமாேடு இருக்க நாள் நாளும் நிகழும் சங்கமம் நல் விளைவாேடு, நலமில்லா சூழலின் சங்கமம் முன் கர்மத்தாேடு, நன்றாய் உயிரின் சங்கமம் ஆக்கையாேடு, அந்த ஆக்கையின் சங்கமம் ஆண் பெண் கலப்பாேடு அறியங்கால் அடியாரின் சங்கமம் உயர் தாெண்டாேடு, உயர் தாெண்டின் சங்கமம் நல்புண்ணியத்தாேடு, ஆன்மா ஆக்கை எடுத்த பயன் புலன் ஆசை விட்டு அன்றாடம் அறம் சத்யம் தாெடர்ந்து மெய் ஞான வழியில் சென்று ஆக்கை தாண்டி ஆன்மாவை இறையாேடு சங்கமித்தலே. சங்கமிக்கும் காலம் வரை தேகம் மீண்டும் மீண்டும் சங்கமிக்கும். தமிழ் சங்கமம் வளர்த்த அன்னை மீனாள். பெருகூர்(ஓர் ஊர்) தன்னில் இருந்து சங்கத்தாேடு சில சங்தேகத்தாேடு எம்முன் அமர்ந்த என்றும் எம்மையே சங்கமித்து எம்மையே சங்கல்பம் செய்து சங்கில் இருந்து நாதம் வந்தாலும் எம்(அகத்திய மாமுனிவர்) நாதமாக எண்ணி எம்மையே எம்மையே சங்கநாதம் செய்யும் பூர்வ ஜென்ம தாெடர்……. நல்லாசி.
விளக்கம்:
நதியின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) ஆழியாேடு (கடலோடு)
அந்த ஆக்கையின் (உடம்பின்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) ஆண் பெண் கலப்பாேடு அறியுங்கால் (அறியும் பொழுது)
அடியாரின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) உயர் தாெண்டாேடு
உயர் தாெண்டின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) நல் புண்ணியத்தாேடு
ஆன்மா ஆக்கை (உடம்பு) எடுத்த பயனானது புலன் ஆசை விட்டு அன்றாடம் அறம் சத்யம் தாெடர்ந்து மெய் ஞான வழியில் சென்று ஆக்கை (உடம்பை) தாண்டி ஆன்மாவை இறையாேடு சங்கமித்தலே (கலப்பதே) ஆகும். சங்கமிக்கும் (அப்படி கலக்கின்ற) காலம் வரை தேகம் (உடலோடு) மீண்டும் மீண்டும் சங்கமிக்கும் (ஆன்மா சேர்ந்து பிறந்து கொண்டே இருக்கும்).
தமிழ் சங்கமம் (மூன்று தமிழும் கலந்து இருப்பது) வளர்த்த அன்னை மீனாள் (மீனாட்சி). பெருகூர்(ஓர் ஊர்) தன்னில் இருந்து சங்கத்தாேடு (கூட்டத்தோடு) சில சந்தேகத்தாேடு எம்முன் அமர்ந்த என்றும் எம்மையே சங்கமித்து (சார்ந்து இருந்து) எம்மையே சங்கல்பம் (வைராக்கியமாக பற்றிக் கொண்டு) செய்து சங்கில் இருந்து நாதம் வந்தாலும் எம்(அகத்திய மாமுனிவர்) நாதமாக எண்ணி எம்மையே எம்மையே சங்கநாதம் (சங்கும் நாதமும் போல ஒன்றாக) செய்யும் (இருக்கும் காரணம்) பூர்வ (முந்தைய) ஜென்ம (ஜென்மத்திலிருந்து) தாெடர் (தொடர்ந்து வருகின்ற பற்றினால் ஆகும்) நல்லாசி.