ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 501

கேள்வி: வலம்புரி சங்கைப் பற்றி:

வலம்புரி சங்கை முக்கண்ணனை (மூன்று கண்களைக் கொண்ட சிவ பெருமானை) வைத்து யார் வழிபாடு செய்கிறார்களாே அவர்களுக்கே தர வேண்டும். முக்கண்ணனின் (சிவ பெருமானின்) வழிபாடு முறையாக செய்பவருக்கே வலம்புரி சங்கு சென்று சேர வேண்டும். சங்கை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் முன் சங்கையே அபிஷேகம் செய்ய வேண்டும். அது போலவே மேல் உள்ள குறிப்புகளை அகற்றிவிட்டு (சுத்தம் செய்துவிட்டு) சுத்தமான நீரில் ஏக (ஒரு) தினம் (நாள்) வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான ஆவின் (காேமாதாவின்) பாலிலே சூலத் (27 நாட்களைக் கொண்ட) திங்கள் (ஒரு தமிழ் மாதம்) குறையாது வைத்திருக்க வேண்டும். சூல (27) முறை பால் மாற்ற வேண்டும். கங்கை நீரிலே வைக்க மேலும் நலம். நீரிலே ஒவ்வாெரு முறையும் சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.

ராமர் விட்ட அம்பு

ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.

வைகுண்டசதுர்மூர்த்தி

வைகுண்டசதுர்மூர்த்தி என்பவர் நான்கு தலைகளைக் கொண்ட விஷ்ணு பகவானின் சக்தி வாய்ந்த அம்சமாகும். மனிதத் தலை சிங்கத் தலை பன்றித் தலை உக்கிரமான தலை ஆகியவற்றை உடையவர். ஒரு தலை பின்னால் மறைந்திருக்கிறது. நான்கு தலைகள் கொண்ட விஷ்ணுவைப் பற்றிய விவரங்கள் மகாபாரதத்திலும் சில பண்டைய புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மிருகத்தின் தலை நரசிம்மரையும் வராஹத்தையும் குறிக்கிறது.

அலங்காரத்தில் நந்தி

சிவபெருமானின் வாகனமான நந்தியின் கழுத்தில் கயிறு ஆரம் மணிமாலை தொங்கல் அனைத்தும் கற் சிற்பத்தில் உள்ளது. இடம் கிக்கேரி. கர்நாடக மாநிலம். 12ம் நூற்றாண்டு.

தியானத் தோட்டத்தில் வினாயகர்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

தியானத் தோட்டம்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் சிவன் மற்றும் பிற இந்து தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.