சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

தாருவன முனிவர்கள் தாங்கள் செய்யும் தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதிக்கலாம். சிவபெருமானை வணங்கத் தேவையில்லை என்ற எண்ணத்துடன் சிவபெருமானை வணங்காமல் செருக்குடன் இருந்தார்கள். அவர்களது மனைவிமார்களிடம் தாங்களே கற்பில் சிறந்தவர்கள் தங்களின் கற்பின் வலிமையால் இறைவனை வணங்காமலேயே எதையும் பெறலாம் என்ற அகந்தை இருந்தது. இவர்களது செருக்கை அழிக்க இறைவன் எண்ணம் கொண்டார். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக உருமாறி முனிவர்களின் மனைவியர் முன்பு நடந்தார். இறைவனின் அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவியர்கள் அவரின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். திருமால் மோகினி அவதாரம் எடுத்து முனிவர்கள் முன்பு சென்று நடந்தார். முனிவர்களும் தங்களது யாகத்தையும் தவத்தையும் விட்டு மோகினி ரூபத்தின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். தங்களது மனைவிமார்கள் பிட்சாடணரின் பின்பாக நடப்பதைப் பார்த்ததும் சுய உணர்விற்கு வந்த முனிவர்கள் இதற்கெல்லாம் சிவபெருமானே காரணம் என்று தங்களின் தவவலிமையால் தெரிந்து கொண்டார்கள். உடனே அபிசார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். அனைத்தையும் அழித்தார் சிவபெருமான். முயலகன் என்னும் அசுரனை யாக வேள்வியிலிருந்து வரவழைத்து சிவபெருமான் மீது ஏவினார்கள். சிவபெருமான் முயலகனை தன் காலின் கீழே போட்டு அவன் மேல் திருநடனம் புரிந்து தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை தாருவன முனிவர்களுக்கு உணர்த்தி அவர்களின் செருக்கை போக்கினார்.
இச்செய்தியை அறிந்த உமாதேவியார் தாமே சக்தியாக உள்ளோம். சிவபெருமான் தன்னை அழைக்காமல் திருமாலை மோகினியாக்கி அழைத்து சென்று விட்டாரே என்று எண்ணி சிவபெருமானோடு ஊடல் கொண்டாள். சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்த சிவபெருமான் அதனைப் போக்க நினைத்தார். சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீ செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். என் துணைவியாக கையில் நீயும் ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும் யுத்தக் களத்தில் துர்க்கையாகவும் கோபத்தில் காளியாகவும் உருமாறுகின்றீர்கள். எனவே திருமால் காளி துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்ந்து கொள் என்றார். உடனே உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக் காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார் இந்த நடனமே கௌரி தாண்டவம் ஆகும். உமாதேவியார் தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார். உமாதேவியின் பிரார்த்தனையால் சிவபெருமான் தனது திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார்.


கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இரணியாக்கன் எனும் அசுரன் பிரம்மனை நோக்கி தவமிருந்தான். அவனது தவத்தின் பலனால் பிரம்மன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலில் சென்று மறைந்தான். இதனால் தேவர்கள் செய்வதறியாது திகைத்து திருமாலிடம் முறையிட்டனர். திருமால் தனது கருட வாகனத்தில் கிளம்பினார். வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் எடுத்தார். வராகம் மலையை விட உயரமாகவும் இரண்டு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டது. இப்படி பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலை பிரட்டிப் போட்டு அசுரனைக் கண்டு பிடித்து தன் கொம்பினால் கொன்று உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அந்த வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் அழித்தது. இதன் கொடுமை அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராக வடிவத்தை தன் சூலாயுதத்தால் குத்தினார். அதன் ஒரு கொம்பை ஒடித்து தன் மேனியில் ஆபரணமாக்கினார். அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. வராகம் சிவபெருமானை சரணடைய அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது. சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் திருமால் வைகுந்தம் சென்றார். உலகத்தவர்களின் துயர் துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காசியிலும் தமிழகத்திலும் உள்ள பழமலைக் கோயிலிலும் காணலாம்.
சிவபெருமான் முருகனிடம் அந்த வராகத்தின் கொம்பினை உடைத்து வரும்படி கூற முருகன் வராகத்தின் கொம்பினை உடைத்து வந்தார். அதனை சிவபெருமான் அணிந்து கொண்டார் என்றொரு புராணத்தினை திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.

சோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றார். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு நானே பெரியவன் என்ற எண்ணத்தில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்ற மீன் சோமுகாசுரனைத் தேடிக் கடலை கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டு பிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்த வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மலையைப் போன்ற அந்த மீன் கடலில் கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். அதன் வீரியம் முழுவதையும் அடக்குவதற்காக அதன் விழிகள் இரண்டையும் பறித்து அவற்றைத் தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சுய உருவத்தைப் பெற்று சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க அவரும் தந்து ஆசி கூறினார். மீன் வடிவம் கொண்ட திருமால்லின் செருக்கை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும். அதர்வண வேதம் மீனுருவில் அட்டகாசம் செய்த திருமாலை அடக்கச் சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்துச் சென்றதாக கூறுகிறது. இவரை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


கல்யாண சுந்தரமூர்த்தியின் புராண சிற்பம். இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.
