சிம்மநாதர்

கிழக்கு சாளுக்கிய காலத்தைச் சேர்ந்த சிம்மநாதர். இடம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

திருநாளைப்போவார்

திருநாளைப்போவார் என அழைக்கப்படும் நந்தனார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச தில்லை நடராஜரின் திருவடிகளில் இரண்டரக் கலந்தார்.

விஷ்ணுவும் கருடரும்

விஷ்ணு பகவானும் கருட பகவானும் தோழமையுடன் நிற்கும் சிற்பம். கருடன் மனித வடிவில் காட்டப்பட்டுள்ளார். இடம்: குன்றக்குடிகுடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.