கல்லேஸ்வரர்

தாமரை பீடத்துடன் கூடிய பெரிய கல்பீடத்தின் மீது உமாமகேஸ்வரர் தோற்றத்தில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இரண்டு பறக்கும் வித்யாதரர்களுடன் காட்சி அளிக்கின்றார். இடம் கல்லேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

காளிங்கநர்த்தனம்

கிருஷ்ணர் யமுனை ஆற்றில் வாழ்ந்து வந்த காளிங்கன் எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிக்கும் சுதைச்சிற்பம். இடம் ஹசராராமர் கோவில் ஹம்பி கர்நாடக மாநிலம்.

தியான நிலையில் உள்ள சிவன்

ஹாவேரியில் உள்ள சித்தேசுவரன் கோவிலின் ஷிகாராவில் 11ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கிய சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தியான நிலையில் உள்ள சிவன். இடம் சித்தேசுவரன் கோவில். ஆவேரி மாவட்டம். கர்நாடக மாநிலம்.

அனுமன்

ராம தூதுவனாக ராவணனிடம் சென்ற அனுமன் தனது வாலை ஆசனமாக உருவாக்கி ராவணனுக்கு சரி சமமாக அமர்ந்திருக்கும் காட்சி. இடம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயில்

லட்சுமணன்

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

கருடபகவான்

அமிர்த கலசத்திற்காக கருடபகவான் நாகர்களுடன் சண்டையிடும் காட்சி கருட விஷ்ணு கெஞ்சனா பண்பாட்டு பூங்காவில் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ளது.