ஸ்ரீ கோதண்ட ராமர் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை. இடம்: ஊட்டத்தூர்




ஸ்ரீ கோதண்ட ராமர் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை. இடம்: ஊட்டத்தூர்




ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.


வைகுண்டசதுர்மூர்த்தி என்பவர் நான்கு தலைகளைக் கொண்ட விஷ்ணு பகவானின் சக்தி வாய்ந்த அம்சமாகும். மனிதத் தலை சிங்கத் தலை பன்றித் தலை உக்கிரமான தலை ஆகியவற்றை உடையவர். ஒரு தலை பின்னால் மறைந்திருக்கிறது. நான்கு தலைகள் கொண்ட விஷ்ணுவைப் பற்றிய விவரங்கள் மகாபாரதத்திலும் சில பண்டைய புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மிருகத்தின் தலை நரசிம்மரையும் வராஹத்தையும் குறிக்கிறது.

10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர்களின் மகிஷாசுரமர்த்தினி. இடம் நரசமங்களா கர்நாடக மாநிலம்.

நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சாளக்கிராமம் கல் வராஹமூர்த்தி சிற்பம்

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தூணில் காணப்படும் வராஹிஅம்மன்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.







இந்தோனேசியா நாட்டின் உபுத் பாலி தீவில் உள்ள அர்மா அருங்காட்சியகத்தில் ராமர் மற்றும் சீதாதேவியின் சிற்பம்.

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள யந்த்ரோதரகா அனுமான் கோவிலில் கிரானைட் பாறையில் கட்டப்பட்ட ஸ்ரீசக்ராவின் மையத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனுமான்.

சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.
