தர்மதாரா லிங்கம்

32 பட்டைகளுடன் உள்ள இந்த சிவ லிங்கம் 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மிகப்பழமையான லிங்கமாகும். இவர் முன்பு அமர்ந்திருக்கும் நந்தி இறைவனை நேராக பார்க்காமல் தனக்கு வலது பக்கமாக சிறிது திருப்பி இருக்கிறார். இவர் காஞ்சிபுரம் ராமநாதர் கோவிலில் இருக்கிறார்.

லட்சுமி நரசிம்மர்

பெட்டன்னா ஹெகடே சோமன்னா மற்றும் கேஷன்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பூர்வீகவாசிகளிடமிருந்து ஒரு இலவச இடத்தைப் பெற்று கி.பி 1234 இல் கோவிலைக் கட்டினர் என்று கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுபவர் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.

நிற்கும் நந்தி

சிவாலயங்களில் உள்ள நந்தி அமர்ந்த நிலையில் ஈசனை பார்த்தபடியே எப்போதும் இருப்பார். இங்கு தியாகேசப் பெருமான் முன்பாக இருக்கும் நந்தி எழுந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சுந்தரருக்காகத் தூது சென்ற சிவபெருமான் செல்லும் போது தன்னுடைய நந்தி வாகனம் எழுந்து வருவதற்கு நேரம் ஆகும் என்ற காரணத்தால் நடந்தே சென்றார். இதனால் இனி ஒருபோதும் அவரை நடக்க விடக்கூடாது என்பதற்காக நந்திப் பெருமான் தயார் நிலையில் எழுந்து நிற்கிறார்.

ரிஷபவாகனதேவர்

சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.