நிற்கும் நந்தி

சிவாலயங்களில் உள்ள நந்தி அமர்ந்த நிலையில் ஈசனை பார்த்தபடியே எப்போதும் இருப்பார். இங்கு தியாகேசப் பெருமான் முன்பாக இருக்கும் நந்தி எழுந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சுந்தரருக்காகத் தூது சென்ற சிவபெருமான் செல்லும் போது தன்னுடைய நந்தி வாகனம் எழுந்து வருவதற்கு நேரம் ஆகும் என்ற காரணத்தால் நடந்தே சென்றார். இதனால் இனி ஒருபோதும் அவரை நடக்க விடக்கூடாது என்பதற்காக நந்திப் பெருமான் தயார் நிலையில் எழுந்து நிற்கிறார்.

ரிஷபவாகனதேவர்

சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.

விஷ்ணு

கர்நாடகாவில் உள்ள பதாமி குகைகளில் உள்ள விஷ்ணுவியின் கம்பீரமான சிற்பம். விஷ்ணு கருடன் இடப்பக்கம் உள்ளார். வலப்பக்கம் லட்சுமிதேவி உள்ளார்.