வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.
இமாச்சல் பிரதேஷ் மாநிலம் காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டுள்ளார்.
மனிதன் மரணம் அடைந்த பின்னர் செய்யும் 11 நாள் கிரியை செய்த பலனானது சிவனருள் மூலம் ஆத்மாவை எம தர்மனிடமிருந்து மீட்டு ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்கப்பட்டு மூதாதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்காட்ட சிலையாக வடித்துள்ளார்கள்.
சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.
மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போது ஆபரணங்கள் தலையில் கீரிடத்துடன் உடன் வயிற்றில் சிறிது தொந்தியுடன் முதல் சிற்பத்தில் இருக்கிறார். இறைவனின் திருவடி தீட்சை பெற்று சிவனடியார் ஆன பின்பு ருத்திராட்ச மாலையுடன் தொந்தி இல்லாமல் கைகள் கட்டிக் கொண்டு பணிவுடன் 2 வது சிற்பத்தில் இருக்கிறார். இடம் ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோவில் திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டம்.