மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -12

கர்ணன் துச்சாதனனிடம் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் கர்ணன் மேல் கோபம் கொண்டு தக்க நேரம் வருகின்ற பொழுது உன்னை கொள்வேன் என்று விரதம் எடுக்கின்றேன் என்றான். அதேசமயத்தில் சகாதேவன் சகுனியை கொள்வேன் என்று விரதம் கொள்கிறேன் என்றான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் சகாதேவனையும் சமாதானப்படுத்தினான். கௌரவர்கள் போட்டிருந்த கேடு நிறைந்த திட்டங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று திரௌபதி திருதராஷ்டிரனிடம் வேண்டினாள். துரோணரும் விதுரரும் மற்றும் சிலரும் அவருடைய பரிதாபகரமான வேண்டுதலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இதைக் கேட்ட திருதராஷ்டிரர் மகளை என்று திரௌபதி பார்த்து அழைத்து தன்னுடைய புதல்வர்களாகிய துரியோதனனும் துச்சாதனனும் வரம்பு மீறி நடந்து கொண்டதை குறித்து நான் ஆட்சேபம் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.

அதைக்கேட்ட திரௌபதி தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்துவிட்டு அவர்கள் மனைவியை மட்டும் மகளே என அழைப்பது முரணாய் இல்லையா தங்களுக்கு? கணவரின் பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த அஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும் இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள் அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? என்று கேட்டாள். மன்னர் திருதராஷ்டிரும் மற்றவர்களும் வாய்மூடி மௌனமாய் இருந்தார்கள். முதலில் யுதிஷ்டிரர் மனைவியை இழந்து ஆதன் பிறகு தன்னை இழந்தாரா? இல்லை. ஆகவே என்மீது அவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? ஆக நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும் என்றாள்.

திரௌபதி சுதந்திரமானவள் என்று திருதராஷ்டிரன் அறிவித்தார். அதற்கு திரௌபதி பாண்டவர்கள் ஐவர் அன்புக்கு மட்டுமே நான் அடிமை. மற்றபடி நான் சுதந்திரமானவள் என்பதை இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்றாள். பிறகு மன்னரே நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் கௌரவர்களுடன் ஒரு முறையல்ல இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள் என்றாள். அதற்கு திருதராஷ்டிரரின் மனைவி காந்தாரி மகளே நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக்க பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்று எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி மகளே என்றாள். அதற்கு திரௌபதி சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று அனைவருக்கும் நிச்சயம் உணர்த்துவேன் என்றாள்.

திருதராஷ்டிரர் திரௌபதிக்கு அனுமதி கொடுத்தார். கர்ணன் துரியோதனனிடம் நண்பா மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம் என்றான். சகுனி துரியோதனன் துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் ஆட்டத்திற்கு நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.