மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -12

துரோணாச்சாரியர் கூடாரத்திற்கு மிகவும் சோர்வுடன் துரியோதனன் நடந்து சென்றான். துரோணரிடம் இன்று என் தம்பியர் பலர் மாண்டனர். பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர்கள் பலர் இறந்தனர். ஜயத்ரதனும் மாண்டான். அர்ஜுனன் நம் பக்கத்தில் உள்ள படைகளுக்கு செய்து உள்ளபடி நாசத்தை எண்ணிப்பாருங்கள் 7 அஸ்வினி படையை அவன் அழித்திருக்கின்றான். எனக்காக யுத்தம் செய்ய வந்த பல வேந்தர்களையும் அவன் அழித்துவிட்டான். ஜயத்ரதனுக்கு நான் கொடுத்திருந்த உத்தரவாதம் பொய்யாக போயிற்று. எனக்கென்று உயிரை கொடுத்த வீரர்கள் பலருக்கு நான் கடமைப்பட்டவக இருக்கின்றேன். பாண்டவர்களைக் கொன்று நஷ்டத்தை ஈடு செய்வேன். இது சாத்தியப்பட விட்டால் பாண்டவர்களால் கொல்லப்படும் நான் சொர்க்கத்திற்குச் சென்று என் தோழர்களோடு சேர்ந்து கொள்வேன். இந்த இரண்டில் ஒன்று இப்பொழுதே நிகழ்ந்தாக வேண்டும் என்று கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

துரோணர் துரியோதனன் பேசியதை கேட்டு மிகவும் வருத்தமடைந்தார். துரியோதனனை பார்த்து வருத்தப்படாதே துரியோதனா என்னுடைய வல்லமை முழுவதையும் நான் இப்பொழுதே பயன்படுத்தப் போகிறேன். உன்னுடைய விரோதிகள் அனைவரும் கொல்லப்படும் வரை நான் அணிந்திருக்கும் இந்த கவசத்தை நீக்க மாட்டேன் எதிரிகளை அழிப்பேன் அல்லது அந்த முயற்சியில் நான் அழிந்து போவேன் என்று கூறிவிட்டு போர்க்களத்திற்கு கிளம்பினார். சூரியன் மறைந்ததும் இரவுப் போரை தொடங்கினார். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் அன்றைய பதினான்காம் நாள் போர் தொடர்ந்தது.

துரோணர் வில்லுடனும் வேலுடனும் தன் ரதத்தில் ஏறி போர்க்களம் நோக்கி பயணித்தார். அவரின் தேர் சத்தத்தை வைத்தே துரோணர் வருவதை அறிந்தான் அர்ஜுனன். பாண்டவர்களின் படை தளபதி திருஷ்டத்துய்மன் இரவு போர் என்பதால் திட்டம் ஒன்றை தீட்டினான். மனிதர்களை விட அரக்கர்களுக்கு பலம் அதிகம் என்பதை மனதில் கொண்டு பீமனின் மகன் கடோத்கஜன் அவனின் மகன் அஞ்சனபர்வா ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்தான். மேலும் கடோத்கஜன் அரக்கிக்கு பிறந்ததால் அவனுக்கு மாய விளையாட்டும் சித்து விளையாட்டும் தெரிந்தவன். பீமன் பலத்தில் பாதியும் தன் தாய் இடும்பியிடம் இருந்து பாதி பலமும் கொண்ட அசாத்திய வீரன் கடோத்கஜன். அபிமன்யூவை கொன்ற கௌரவ படைகளை பழி வாங்க காத்து கொண்டிருந்தான் கடோத்கஜன். கொடுத்த பொறுப்பை ஏற்ற கடோத்கஜன் தந்தை பீமனின் காலில் விழுந்து ஆசிபெற்றான். பின்னர் யுதிஷ்டிரர் அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களிடம் ஆசி பெற்று கிருஷ்ணரிடம் சென்றான். என்றும் இல்லாமல் அன்று கிருஷ்ணர் அவனை நெஞ்சோடு தழுவி கொண்டார். சற்று நேரம் அவனை உற்று நோக்கிய கிருஷ்ணர் உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் என்று வாழ்த்தினார். புது தெம்போடும் அபிமன்யூவின் நினைவுகளோடும் போர்க்களம் நோக்கி தன் வீர பயணத்தை தொடங்கினான்.

பகலில் நிகழ்ந்ததை விட பன்மடங்கு வேகமாக இரவில் யுத்தம் நடைபெற்றது. இருளில் இரண்டு பக்க படைகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டனர். துரியோதனனும் துரோணாச்சாரியாரும் வீராவேசத்துடன் போர் புரிந்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.