ராமாயணம் பால காண்டம் பகுதி -26

தசரதர் புதல்வனான ராமரின் வீரத்தை கண்களால் பார்த்துவிட்டேன். அற்புதமான காட்சி. இன்று இப்படி நடக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை ராமரை கணவனாக அடைவதன் மூலமாக என்னுடைய பரம்பரைக்கு சிறப்பான புகழை கொண்டு வரப்போகின்றாள் என்னுடைய மகள் சீதை. விஸ்வாமித்ரரே அடுத்து என்ன செய்ய வேண்டும் தாங்கள் கூறுவதை செயல்படுத்துகின்றேன் என்றார் ஜனகர். விஸ்வாமித்திரர் தசரத சக்கரவர்த்தியை வரவழைத்து திருமணம் செய்வதே சிறந்த முறையாகும். ஆகையால் தூதர்களிடம் ஓலையை கொடுத்து அயோத்திக்கு சென்று இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஜனக மகராஜாவின் தூதர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து அயோத்தியை அடைந்தார்கள்.

தசதர மன்னரை பார்த்து தசரத சக்ரவர்த்தி அவர்களே ஜனக மகாராஜர் தங்களுக்கு ஓர் நற்செய்தியை அனுப்பியுள்ளார். விசுவாமித்திரருடன் மிதிலைக்கு வந்த ராமர் சீதையின் சுயம்வரத்தில் நாணை இழுத்து சிவதனுசை ஒடித்து விட்டார். ஜனக மகாராஜர் தங்கள் புத்திரனின் திருமண அனுமதியையும் தங்களின் வரவையும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் எனக் கூறினார்கள். ராமனின் வீரச் செயல்களும் ராமனால் சிவதனுசு முறிபட்டதும் கேட்ட தசரதர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டு மக்களுக்கு தசரதன் ராமனின் திருமணத்தை முரசொலித்து செய்தி அறிவித்தார். நாட்டு மக்களும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.

தசரதரின் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. வீரர்களும் பெண்களும் மிதிலை நகர் நோக்கி பிரயாணம் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடல் பாடலுடன் தங்களுக்கே திருமணம் நடப்பது போல் உணர்ந்து மகிழ்ந்தனர். திருமணம் நடத்தி வைக்க அந்தணர்களும் சென்றனர். பெண்களின் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, மக்களின் சிரிப்பொலி என போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. தசரத மன்னருடம் பட்டத்தரசிகளும் இசையொலியின் இரைச்சலோடும் படைகளின் ஒலியோடும் வழிநடையாக சென்றனர். கோசலை, கைகேயி, சுமத்திரை மூவரும் தோழிகளுடன் புடைசூழ தேரில் சென்றனர். சீர் கொண்டு செல்லும் பெண்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர். தசரதன் நவரத்தின தேரில் வசிஷ்ட முனிவருடன், பரதனும், சத்ருக்குனரும் சென்றனர். இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை அலங்கரித்து கொண்டு தங்களுக்கே திருமணம் என்பது போல் மகிழ்ச்சியோடு இருந்தனர். தசரதன் தன் பரிவாரங்களுடன் பயணம் செய்து ஐந்தாம் நாளில் மிதிலையை அடைந்தார். அவர்களுக்காக காத்து கொண்டியிருந்த ஜனகர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுத்தார். ஜனக மகாராஜா தசரத சக்கரவர்த்தியை ராமர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். ராமர் தசரதரிடன் ஆசி பெற்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.