நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சாளக்கிராமம் கல் வராஹமூர்த்தி சிற்பம்

நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சாளக்கிராமம் கல் வராஹமூர்த்தி சிற்பம்
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தூணில் காணப்படும் வராஹிஅம்மன்
சிவபெருமானின் வாகனமான நந்தியின் கழுத்தில் கயிறு ஆரம் மணிமாலை தொங்கல் அனைத்தும் கற் சிற்பத்தில் உள்ளது. இடம் கிக்கேரி. கர்நாடக மாநிலம். 12ம் நூற்றாண்டு.
அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.
அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் சிவன் மற்றும் பிற இந்து தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.
திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
இந்திரன் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு அமைதியான தியானத் தோரணையில் அமர்ந்திருக்கிறார். தேவேந்திரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன் இந்து மதத்தில் தேவ லோகத்தின் தலைவனாகவும் பௌத்தத்தில் ஒரு பாதுகாவலராகவும் சமண மதத்தில் உயர்ந்த சொர்க்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இவர் ஜீயஸ் மற்றும் வியாழன் போன்ற மேற்கத்திய கடவுள்களுடன் ஒத்த சக்திகளையும் புராணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். புத்த புராணங்களில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார் இந்திரன். புத்தரின் பிறப்புடன் தொடர்புடையவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி நேபாளத்தில் ஒரு சுதந்திர தெய்வமாக வணங்கப்படுகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இந்த 16 ஆம் நூற்றாண்டு சிலை தற்போது சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.