ஒற்றைக் கல்லில் கருடன் விஷ்ணு லட்சுமி மற்றும் 8 பாம்புகள் என 11 கடவுள்கள் செதுக்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரியாரால் நிறுவப்பட்ட சிலை இது. சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. கருட பகவான் ஒரு காலில் மண்டியிட்டு வலது கையில் விஷ்ணு பகவானனையும் இடது கையில் லட்சுமி தேவியையும் ஏந்தி நிற்கிறார். இடது கை சிறிது உயர்ந்த நிலையில் உள்ளது. இது லட்சுமியின் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. மகாவிஷ்ணுவும் கருடனும் மகாலட்சுமியை நோக்கி தரிசனம் செய்கின்றனர். ஆனால் லட்சுமி தேவி நேராக அமர்த்த வண்ணம் தன்னை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். கருடன் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. அதைச் சுற்றி 8 பாம்புகள் அவரது அணிகலன்களாக உள்ளன. இது விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோவில். இடம்: கருடதேவஸ்தானம். கோலாதேவி கிராமம். கோலார் மாவட்டம். கர்நாடக மாநிலம்.