ஸ்ரீ மண்ணுடையார்

இந்திய கோயில்களில் தங்கமும் விலை மதிக்க முடியாத பொருளும் நிறைய உள்ளது என்று வெளி நாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்த கும்பல் ஊர் ஊராகச் சென்று கோயில்களை இடித்து இறைவனது திருமேனிகளை உடைத்தும் பஞ்ச லோக சிலைகளையும் கோயில் சொத்துக்களையும் திருடிக் கொண்டு வந்தது. இப்படி வந்தவர்கள் தமிழகத்தின் உப்பிலியப்பன் கோயிலுக்கும் வந்தார்கள். மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இறைவனது திருமேனியைக் காக்க ஸ்ரீ தாயார் ஸ்ரீ பெருமாள் திருமேனிகளை சூளையில் மறைத்து வைத்து சூளையைக் கொளுத்தி விட்டார். கொள்ளையடிக்க வந்த கும்பல் இது என்ன என்று கேட்ட போது இது மண் பாண்டங்கள் செய்யும் சூளை என்று சொன்னார். வந்தவர்கள் சென்ற பின் சூளையின் நெருப்பை அணைத்து திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வைத்தார். இந்தக் குயவருடைய கைங்கர்யத்திற்காக அவருக்கு ஸ்ரீ மண்ணுடையார் என்ற திரு நாமத்தை கொடுத்து பெருமாளை எப்போதும் அவர் வணங்கும்படியான சிலை செய்து பெருமாள் சன்னதிக்கு நேரே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.