பொதுவாக சம்ஹார யாகத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்குவது சிறப்பு. ஆனால் இதற்கு ஆலயத்து விதிமுறைகள் இடம் தராது என்பதை யாம் அறிவோம். எனவே அதிகாலை துவங்கினாலும் சாயரட்சை வரையாவது செய்வது நல்லது. இடையிலே அவசியம் ஏற்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதலில் வழக்கம் போல் மூத்தோனுக்கு யாகம் செய்துவிட்டு பிறகு தொடர்ந்து சத்ருசம்ஹார யாகத்தை செய்யலாம். கடைசியாக ஒரே பூரணாகுதியை தந்துவிட்டால் போதும். இதிலே கால அவகாசத்திற்கு ஏற்ப மந்திரங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிப்பில் பிழையின்றி சொல்வதும் எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஏதோ கடமைக்கு அக்னியில் வார்ப்பது போல் இல்லாமல் பொருள்களை பயபக்தியோடு பவ்யமாக நிதானமாக பொறுமையாக பயன்படுத்துதல் சிறப்பை தரும். 300 மந்திரங்கள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் மனிதர்களை அமரவைத்து உரத்த குரலிலே உச்சரிப்பு பிழையின்றி ஆத்மார்த்தமாக உச்சரித்து உச்சரித்து ஒவ்வொன்றிற்கும் பூர்த்தி முடிவிலே பொருள்களை யாகத்தீயில் வார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.
பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.
சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.
கேள்வி: என் மனைவியிடம் ஆன்மீக விஷயங்களில் பொய் சொல்லி ஈடுபட வேண்டியிருக்கிறது:
உன் போன்ற பலருக்கும் இதே நிலைதான். அப்படியே செய் என்று ஊக்குவிப்பதும் கூறுவதும் ஒரு மகானுக்கு அழகல்ல. அல்லது உண்மையைக் கூறி இல்லத்திலே குழப்பத்தை ஏற்படுத்துவதும் மகான்களுக்கு அழகல்ல. எம் போன்ற ஞானி உலகியல் ரீதியாக இது குறித்து ஒரு யோசனையைக் கூறினாலும் அது ஞான நிலைக்கு ஏற்புடையதாக இராது. ஞானப் பார்வையிலே ஒரு யோசனையைக் கூறினால் உன் போன்ற மனிதனுக்கு அது ஏற்புடையதாக இராது. இரண்டையும் அனுசரித்து கூறுவது என்னவென்றால் எல்லா இல்லங்களிலும் தாயோ தாரமோ இது போன்ற ஆன்மீக அமைப்புகளை விரும்பாததின் காரணம் இதனால் குடும்ப நடைமுறை செலவினங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான். எனவே குடும்பத்தை பாதிக்காமல் உன் போன்ற ஒருவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாங்கள் அதை வரவேற்கிறோம். அல்லது இயல்பாகவே உன் மனம் முதிர்வடைந்து இந்த அளவில் குடும்பத்திற்கு செய்தால் போதும் இதனை தாண்டி செய்வதெல்லாம் வீண் விரயம்தான். அவற்றையெல்லாம் புண்ணியமாக மாற்றி வைத்துக் கொண்டால் அது குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு உதவும் என்ற எண்ணம் அழுத்தந்திருத்தமாக உன் மனதிலே வந்து விட்டால் அவர்கள் விரும்புவதைப் போல ஒரு சொல்லாடலை பயன்படுத்திவிட்டு உன் விருப்பம் போல் செய்யலாம். எனவே இந்த இடத்தில் உண்மையைக் கூறினால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் உண்மையைக் கூற வேண்டிய அவசியமில்லை. பொய்யைக் கூறு என்று ஜீவ நாடியில் ஞானிகளே கூறிவிட்டார்கள் என்ற அபவாதத்திற்கு ஆளாகவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே மௌனத்தைக் கடைபிடி. அதே தருணம் தாரத்தின் நிலையில் என்ன குழப்பம் ஏற்படும்? என்றால் கணவன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழாத அளவிற்கு அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உன் போக்கில் நீ செல்லலாம்.
ஒரு சீடன் குருவிடம் தன் சந்தேகத்தை கேட்டான். குருவே வாழ்க்கை இனிமையானதா இல்லை கடுமையானதா? என்றான். அதற்கு அந்த குரு வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது என்று பதிலளிக்க சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் வாழ்க்கையை பற்றி கேட்டால் இவர் பூனையின் பற்களை பற்றி சொல்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சீடனிடம் குரு அதனை விளக்கினார். ஒரு பூனையின் குட்டியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்று கேட்டால் பூனையின் பற்கள் மிக மென்மையானவை இனிமையானவை என்று சொல்லும். பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாரு அக்கறையுடன் அதனை மிகப்பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும். அதே ஒரு எலியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்ற அதே கேள்வியை கேட்டால் ஐயோ பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை என்ற பதில்தான் வரும். பூனையின் பற்களை போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும் என்று விளக்கினார் அந்த துறவி.
இறையருளின் துணைகொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறையருளின் துணையின்றி எது நிகழும் எக்கணமும்? இறையருளை பெறத்தானே மாந்தர்கள் விடாமுயற்சி செய்யவேண்டும். இறையருளைத் தவிர வேறு எதைப் பெற்றாலும் பலனில்லை என்பதை உணரவேண்டும். இதுபோல் இறையருளை பெறுகிறேன் என்று இறை வணக்கம் செய்கிறேன் என்று இறை தங்கியிருக்கும் பிற உயிர்களை வருத்துதல் கூடாதப்பா. இதுபோல் வாழ்விலும் வாழ்விற்கு பிறகும் உடன் வருவது கர்மங்கள் என்பதை புரிந்து இதுபோல் கர்ம பாவத்தின் அடிப்படையிலே மனித வாழ்வு அமைகிறது என்பதையும் புரிந்துகொண்டு இயம்புங்கால் கணத்திற்கு கணம் (ஒவ்வொரு வினாடியும்) விழிப்போடு வாழ பழக வேண்டும். இதுபோல் பொறுமை விடாமுயற்சி பெருந்தன்மை சகிப்புத்தன்மை இரக்கம் கருணை அன்பு என்ற குணங்களை வளர்த்துக் கொண்டே செல்ல செல்ல இறையருள் தேடி வந்து கொண்டே இருக்கும்.
இதுபோல் தொடர்ந்து இறையருளை பெறவேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதன் முதலில் விடவேண்டியது ஆளுமை குணத்தை. தான் எண்ணுவதை தான் நினைப்பதை பிறர் செய்ய வேண்டும். தான் எதை ஆசைப் படுகிறோமோ அதன்படி தன்னை சுற்றியுள்ளவர்கள் நடக்க வேண்டும் என்ற தன்முனைப்போடு இருக்கக் கூடிய அந்த ஆளுமை குணத்தை ஒரு மனிதன் விட்டொழித்தால்தான் இறையருளை நோக்கி அவன் மனம் பயணம் செய்ய துவங்கும். இந்த ஆளுமை குணம்தான் பல மனிதர்களை அதள பாதாளத்திற்குள் தள்ளுகிறது. வேண்டுமானால் ஒருவரிடம் இருக்கக் கூடிய தனத்திற்காகவோ பதவிக்காகவோ மற்றவர்கள் அடிபணிவதுபோல் பாவனை செய்யலாமே ஒழிய உண்மையான அடிபணிதல் என்பது இராது. எனவேதான் பிற மனிதர்களை அன்பால் கருணையால். உதவி செய்து அடிமையாக்கலாம். ஆனால் அதிகாரத்தால் அடிமையாக்குதல் என்பது எக்காலமும் நீடிக்காது அது இறையருளையும் பெற்றுத் தராது. இறை தான் படைத்த உயிர்கள் ஒன்றுக்கொன்று சமாதானத்துடனும் சத்தியத்துடனும் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனும்தான் படைத்திருக்கிறது. ஆனாலும்கூட அவ்வாறெல்லாம் நிகழ்வதில்லை. காரணம் இந்த ஆளுமை குணமும் தன்முனைப்பும் ஒரு மனிதனை வெறிகொண்டு எழச்செய்து அதனாலே பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தி காலகாலம் தொடர்ந்து அந்த ஆத்மாவை பாவப் படுகுழியிலே வீழ்த்திவிடுகிறது. எனவேதான் இந்த தன்முனைப்போடு கூடிய ஆளுமை குணம் அது ஆணோ பெண்ணோ அது யாரிடமும் இல்லாமல் இருப்பதே இறைவனின் அருளைப் பெறுவதற்கு மிகப்பெரிய வழிமுறையாகும்.
ஆகுமப்பா அதுபோல் ஒருவேளை ஒருவன் அள்ளியள்ளி தர்மங்கள் செய்யலாம். அனேக ஸ்தலங்கள் சென்று தரிசனம் செய்யலாம். அனேக பாழ்பட்ட ஆலயங்களை எழுப்புவிக்கலாம். ஆனாலும் கூட எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் தேவையற்ற ஒரு தீக்குணம் இருந்து விட்டால் அது ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் போல. முன்னமே யாம் உதாரணம் இயம்பியதுபோல வித்தையிலே பல்வேறு பாடப்பிரிவுகள் இக்காலத்திலே இருக்கிறது. அது மொத்தம் ஐந்து என்றால் நான்கிலே தேர்ச்சி பெற்று ஒன்றிலே தேர்ச்சி பெறவில்லையென்றால் தகுதிச் சான்றிதழை வித்தைக் கூடம் தராது. ஐந்திலேயும் தேர்ச்சி பெறவேண்டும். அதைப் போலத்தான் இறை வழியில் வரக்கூடியவர்கள் நான் நித்தமும் பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரம் சொல்லி பூஜை செய்கிறேன். நித்தமும் எதாவது ஒரு ஆலயம் செய்கிறேன் என்றெல்லாம் கூறினாலும் கூட இதைத் தாண்டி மனித நேயத்துடன் நடந்து கொள்கிறானா? என்றுதான் இறை பார்க்கும். எனவே இதுபோல் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோட இறையருளை பெறுவதற்கு இந்த சிந்தனை உதவி செய்யும்.
ஆணி மாண்டவ்யர் மிகப் பெரிய ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.
அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.
நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார்.
விஷ்ணு பகவான் தனது சகோதரி பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காட்சி ஒற்றைக் கல் தூணில் சிற்பமாக உள்ளது. ஆட்கொண்டநாதர் ஆலயம் இரணியூர் சிவகங்கை மாவட்டம்.
கேள்வி: மகாபாரதத்தில் வரும் விதுரரை பற்றி சொல்லுங்கள்:
விதுர நீதி என்று ஒரு நீதியே இருக்கிறதப்பா. விதுரனும் ஒரு மகான்தான். அதுபோல் திருதராஷ்டிரனுக்கு விளக்கம் எல்லாம் தந்தது இவன்தான். இதுபோல் அன்றே இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் நடப்பதை எல்லாம் கண்டு உணரும் ஞான திருஷ்டி பெற்றவனப்பா. இந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும் பற்றற்று வாழக்கூடிய தன்மையை ஒரு மனிதன் பெற்று விட்டால் ஜனகனைப் போல யோகியாகிறான் ஞானியாகிறான். யோகியாக வேண்டும் ஞானியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. ஆனால் சிறு துன்பம் வந்தாலும் கூட சோர்ந்து போய் விடுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவனால் அதிகமதிகம் அவமானங்களை தாங்க மனம் இடம் தருகிறதோ எவனொருவனால் அதிகமதிகம் பிறரால் ஏமாந்தவன் என்கிற பட்ட நாமத்திற்கு ஆளாக நேரிடுகிறதோ எவனொருவனால் பிழைக்கத் தெரியாதவன் என்று பலரால் கூறப்படுகின்ற நிலை ஏற்படுகிறதோ சராசரி உலகியல் செயல்கள் எல்லாம் பாவங்கள் என்று வெறுத்து ஒதுக்கி எவனொருவன் எம் வழியில் வருகிறானோ அவனுக்குத்தான் ஞான வாழ்க்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். அப்படி வாழ்ந்தவர்களில் விதுரனும் ஒரு உயர்ந்த ஞானியப்பா.
ஆணி மாண்டவ்யர் மிகப்பெரிய ஞானி. மகாபாரத கால கட்டத்திற்கு முன்னால் இருந்து இன்றளவும் வாழ்ந்து வருகின்ற அற்புத ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.
அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழு வில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.
நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார் என்ற ஒரு புராண சம்பவமும் உள்ளது.
காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக். அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு தெளிவு பெற்ற சிந்தனை நிர்வாகத் திறன் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கியவர் ராமதேவர். ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷமம்மா) என்றும் சொல்வார்கள். இந்தத் தம்பதியருக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை இருந்தது. அந்தத் தம்பதியினர் ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில் வேதவியாசர் தோன்றி காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி மறைந்தார். நாட்கள் கடந்தன அவர்கள் அங்கு செல்லவில்லை. ஒரு நாள் ராமதேவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மயக்கம் அடைந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன் கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் உடன் கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண் யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும். என்பது வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் பிரமண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனையுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடத்தின் தலைவரான பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.
தீர்க்க சுமங்கலி பவ புத்ரவதீ பவ என்று ஆசிர்வாதம் செய்தார் பிரம்மண்ய தீர்த்தர். சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து சுவாமி கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெற வந்தாள் எனக் கூறினார்கள். அவர்களை பார்த்த பிரம்மண்ய தீர்த்தர் சீத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் வைத்திருந்த கமண்டல நீரை ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார். உடனே ராமதேவர் உயிர்த்தெழுந்தார். எழுந்தவர் மனைவியுடன் சேர்ந்து பல முறை ஸ்வாமிகளை வணங்கினார். அவர்களுக்கு ஆசி கூறிய பிரம்மண்ய தீர்த்தர் உங்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். அதன்படி சீதாம்மா கருவுற்றாள். குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த பிரம்மண்ய தீர்த்தர் மடத்தில் இருந்து ஒரு தங்கக் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூமியில் படாமல் பிறக்க ஏற்பாடு செய்தார். பிரபவ வருடம் வைகாசி மாதம் பிறந்த குழந்தை பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள். சுவாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதாகியது. உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில் யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து வியாச தீர்த்தர் என்ற திருநாமம் சூட்டினார் பிரம்மண்ய தீர்த்தர்.
திருவரங்கம் கோவிலுக்கும் திருவானைக் கோயிலுக்கு இடையே ஒருமுறை எல்லைப் பிரச்சனை எழுந்தது. அனைவரின் உள்ளங்களிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தது. பிரச்சனை நாட்டை ஆண்ட சாளுவ நரசிம்மன் என்ற மன்னரிடம் கொண்டு செல்லப்பட்டது. சாளுவ நரசிம்மருடன் அங்கு வந்த வியாச தீர்த்தர் பிரச்சனை தீர ஒரு வழி சொன்னார். கோவிலில் இருந்து ஒருவர் மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு செல்லும் போது மூச்சு விடுகின்றாரோ அதுவே எல்லை என்றார். இதை சாளுவ மன்னன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்றொரு பிரச்சனை எழுந்தது. யார் ஓடுவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில் நானே ஓடுகிறேன் என்றார் வியாச தீர்த்தார். அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். திருவரங்கம் திருக்கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் மூச்சுவிட்டு நின்றார். அதுவே அரங்கநாதனின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு அனுமன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து இரு கோவிலின் எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைத்தார் வியாச தீர்த்தார்.
கிருஷ்ண தேவராயர் கலிங்கப் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பினார். அப்போது அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள் ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும் என்றார்கள். கிருஷ்ண தேவராயர் வியாச தீர்த்தரிடம் நடந்ததைக் கூறி அவரது பாதங்களில் சரணடைந்தார். ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வியாச தீர்த்தர் தானே மன்னராக இருப்பதாக வழி கூறினார். அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர். குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்குப் பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. கிருஷ்ண தேவராயருக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. அதன் பின் தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர் தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய வியாச தீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து அவரையே மன்னராககினார். அன்று முதல் வியாச தீர்த்தர் வியாசராஜர் என்று அழைக்கப்பட்டார்.
வியாச தீர்த்தர் டெல்லியில் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்று தெரிய வந்தது. தோண்டுங்கள் இதை என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்தார் வியாச தீர்த்தர். உடனே சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை ஒட்டகம் ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து வியாச தீர்த்தருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான்.
இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார். இவர் கன்னடத்தில் பல பாடல்களை இயற்றியுள்ளார். நியாயமிர்தம் தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன. சோமநாத கவியின் வியாசயோகி சரிதம் மற்றும் அவரது சீடரான ஸ்ரீனிவாச தீர்த்தரின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களில் வியாச தீர்த்தரின் வரலாறு உள்ளது.