நரசிம்மர்

திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.

சந்தான கோபாலகிருஷ்ணன்

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்

ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

வராஹ அவதாரம்

விஷ்ணுவின் வராஹ அவதார சிற்பம் விதிஷாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 11 மற்றும் 12 நூற்றாண்டு காலச் சிற்பம். இப்போது குவாலியரின் குஜாரி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தோமர் ராஜ்புத் ஆட்சியாளர் மான் சிங் தோமர் தனது மனைவி மிருக்னயனிக்காகக் கட்டப்பட்டது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

வீர சுதர்சன ஆஞ்சநேயர்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது ஆதனூர். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசத்தில் 11 ஆவதாக இருக்கும் ஆண்டளக்கும் ஐயன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் 20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் சனனதி உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. கருவறையில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயரத்தில் கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி கொடுகிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சுதர்சன சக்கரம் அமைந்திருக்கின்றது. அவரது தலையின் மேல் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் ரக்கொடி எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.