திரிநேத்திர தசபு வீரஆஞ்சநேயர்

மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.

ஹரிஹரன்

ஹரிஹரன் என்பது சைவ வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாக உள்ள இறைவனின் திருவுருவம். இந்தத் திருவுருவம் சங்கரநாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றது. வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். 4 அடி உயரமுள்ள இந்த சிற்பம் உள்ள இடம் கோவா ஸ்ரீ மஹாலசா நாராயணி கோயில்.

சீதா குண்டம்

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் சீதா குண்ட் என்று ஒரு பிரபலமான குளம் உள்ளது. சீதா தேவி நீராடிய இடம் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற ஆன்மிக புனித தலமாக உள்ளது.

வராக நரசிம்மர்

வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

இராமர் பட்டாபிஷேகம்

இராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் காட்சி. இராமரின் அருகில் இலட்சுணன் வணங்கியபடி நிற்கிறார். சீதையின் அருகில் பரதன் இராமர் சீதைக்கு குடைபிடிக்க சத்ருக்கனன் வெண்சாமரம் வீசுகிறார். இராமரின் காலருகே அனுமன். இடம் ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கநாயக சுவாமி ஆலயம். தெலங்கானா மாவட்டம். கிபி 1540 ஆம் ஆண்டில் வனபர்த்தி சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டது.

நரசிம்மர்

திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.

சந்தான கோபாலகிருஷ்ணன்

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்

ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.