அந்தணர்களில் சிறந்தவரே நமது அணியிலும் பிரதான யுத்த வீரர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய படையின் தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களது கவனத்திற்காக சொல்கிறேன்.
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தத்தில் இருக்கும் அனைவரையும் துரோணருக்கு தெரியும் இருந்தும் துரியோதனன் ஏன் அவர்களின் பெயரை துரோணரிடம் சொல்கிறான்?
துரோணரிடம் பாண்டவர்களின் பெயரை குறிப்பட்ட போது இதனைக் கேட்ட தமது படை வீரர்கள் எதிரணியில் இத்தனை பெரிய வீரர்கள் இருக்கின்றார்களே என்று திகைத்து விடக்கூடாது எதிரணி வீரர்களை விட பலசாலிகள் நமது அணியில் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவும் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்களின் பெயரை அனைவருக்கும் முன்பாக துரியோதனன் பெருமைப்படுத்தி சொல்வதினால் அவர்கள் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார்கள் என்ற காரணத்திற்காகவும் துரியோதனன் துரோணரிடம் அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொன்னான்.
பராக்கிரமம் மிகுந்த யுதாமந்யு பலசாலியான உத்தமௌஜா சுபத்திரையின் மகன் அபிமன்யு திரௌபதியின் ஐந்து மகன்கள் இவர்கள் அனைவரும் மகாரதர்களாக இருக்கிறார்கள்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதாமந்யு உத்தமௌஜா என்ற இருவரும் யார்?
பாஞ்சால தேசத்து ராஜ குமாரர்கள் இருவரும் சகோதரர்கள். பலம் மிகுந்தவர்கள். மிகுந்த பலசாலிகள் ஆனதால் இவர்கள் விக்ராந்த வீர்யவான் என்று பெயர் பெற்றவர்கள். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அபிமன்யு என்பவன் யார்?
அர்ஜூனனுக்கும் கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரைக்கும் பிறந்தவன். மத்யச நாட்டு அரசன் விராடனுடைய மகள் உத்தரையை அபிமன்யு மணந்தான். தன் தந்தை அர்ஜூனனிடமும் தாய் மாமன் பிரத்யும்னனிடமும் வில்வித்தை கற்ற நிகரற்ற வீரன். மகாபாரத யுத்தத்தில் எவரும் நுழைய முடியாத சக்கர வியூகத்தில் நுழைந்து எண்ணற்றவர்களை கொன்று குவித்தான். அப்போது துரோணர் கிருபாசாரியார் கர்ணன் அசுவத்தாமன் பிருஹத்பலன் கிருதவர்மா என்ற ஆகிய ஆறு மகாரதர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். இறுதியில் துச்சாதனனின் மகன் தனது கதாயுதத்தால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடிக்க அபிமன்யு மரணமடைந்தான்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: திரௌபதியின் ஐந்து மகன்கள் யார்?
பிரதிவிந்தயன் சுதசோமன் சுருதகர்மா சதானீகன் சுருதசேனன். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஐவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.
இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: மகாரதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
சாஸ்திரங்களிலும் அஸ்திர வில்வித்தையிலும் கைதேர்ந்த நிபுணர்கள் மகாரதர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் தனிஒருவராகவே நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள். பதினாயிரம் வில்லாளி வீரர்களை யுத்தத்தில் வழிநடத்திச் செல்வார்கள்.
குறிப்பு: சுலோகம் 5 மற்றும் 6 இல் துரியோதனனால் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் மகாரதர்கள் ஆவார்கள். பாண்டவ படைகளில் இவர்களைத் தவிர இன்னும் பல மகாரதர்கள் இருந்தார்கள். 6 வது சுலோகத்தின் இறுதியில் ஸர்வே என்ற வார்த்தையை துரியோதனன் சொல்வதாக வருகிறது. இந்த ஸர்வே என்ற சமஸ்கிருத சொல்லினால் பெயர் குறிப்பிடப்படாத பல மகாரதர்களையும் சேர்த்து துரியோதனன் துரோணரிடம் சொல்வதாக கருத வேண்டும்.
சிவலோகத்தில் உள்ள சுத்த சதாசிவர் என்ற மகான் ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும் எம்மை (அகத்தியர்) தரிசிப்பதற்காகவும் சில அரிய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் பூமிக்கு வந்து பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மூலர் என்ற ஓர் இடையர் உயிர் இழக்க அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து சில லீலைகள் புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது. கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஆவினங்கள் (பசுக்கள்) மீது இரக்கம் கொண்டு தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு மூலர் உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து ஆடு மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு மீண்டும் உடலைத் தேடியபோது இறைவன் அசரீரி வாக்காக உன் உடலை யாம் மறைத்து விட்டோம். இனி இந்த உடலிலே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய் என்று கூற பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததோடு 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.
ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி யோகம் ஞானம் மந்திரம் தந்திரம் வித்தை கலை சாஸ்திரம் வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்கு புரியும் வகையிலும் துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம் மற்றும் தேகம் நிலையாமை தேகம் தோன்றுகின்ற தன்மை ஆன்மாவின் தன்மை என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து அதே சமயம் மரபு,சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும் புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதொரு தத்துவ ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் கொண்டு எழுதி வைத்தார். அப்படிபட்ட அற்புதமான மகானப்பா அவர்.
திருஷ்டகேது சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்திபோஜன் சிறந்த மனிதனாகிய சைப்யனும்
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டகேது என்பவன் யார்?
சிசுபாலனின் மகன். சேதி நாட்டு அரசன். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சேகிதானன் என்பவன் யார்?
விருஷ்ணி வம்சத்தை சேர்ந்தவர். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். பாண்டவர்களின் ஏழு அக்ரோணிப் படைகளுக்குரிய ஏழு தளபதிகளில் இவரும் ஒருவர். இவர் மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் கையால் இறந்தார்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: காசிராஜன் என்பவன் யார்?
காசி நாட்டு அரசன். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். மகாபாரதத்தில் சேனாபிந்து என்றும் க்ரோதஹந்தா என்றும் அபிபூ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: புருஜித் குந்திபோஜன் என்ற இருவரும் யார்?
இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள். பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள். இருவரும் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்கள்.
இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: சைப்யனும் என்பவன் யார்?
இவரது பெண் தேவிகாவை யுதிஷ்டிரர் திருமணம் செய்திருக்கிறார். யுதிஷ்டிரனின் மாமனார் ஆவார். மனிதர்களில் சிறந்தவர். மிகப்பெரிய யுத்த வீரர் அதனால் இவர் நரபுங்கவர் என்று அழைக்கப்படுவார்.
இறை வணங்கி இயம்புகிறோம். இத்தருணம் இடைவிடாத பிராத்தனைகள் செய்கின்ற நல் அறங்கள் நலம் சேர்க்கும். இந்த வாழ்வில் எதிர்படும் துன்பங்கள் யாவும் அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து பாவங்கள் செய்யாமலும் செய்த பாவத்தை எண்ணி வருந்தி திருந்தியும் அதோடு இறை வணங்கியும் அறம் புரிந்தும் வாழ நலமாகும். திவ்யமான பரம்பொருளை உணர்ந்து திருவடி பற்றும் வளர துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும் நிரந்தர சாந்தி கிட்டாது. தளர்வோ விரக்தியோ வேதனையோ எதிர்மறை எண்ணங்களோ ஒரு பொழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் கொண்டு எதனையும் எதிர்கொள். பதற்றமின்றி செயல் படுத்துதலும் நலம் சேர்க்கும். சேர்க்கின்ற புண்ணியம் கடைசி வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமொ கடைசி வரையில் இடராகும் (துன்பத்தை தரும்). சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்துவிடும் என்பதால் சிந்திக்க வேண்டும். பாவம் எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா தவறான மாந்தர்களுடன் உறவும் கூடாது. குறித்திடுவோம் எத்தனை துன்பத்திலும் எத்தனை சிக்கலிலும் கருத்தில் இதனை கொள்ள வேண்டும். இதனால் பாவம் செய்தேன் என்றியம்பக் கூடாது. பற்றற்று வாழ அதற்கான முயற்சியைத் தொடர நலம்.
கேள்வி: செடி கொடிகளை கொன்றுதான் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?
மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி யோக நிஷ்டையில் அமர்ந்து யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும் தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும் சூரிய சந்திர ஔியிலிருந்தும் மண்ணிலிருந்தும் கூட அந்த பொருளின் புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல் தன் உடல் சோர்ந்து போகவண்ணம் தேவையான சத்துக்களை கிரகிக்க முடியும். இதற்கு பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை என்று பெயர். இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.
கேள்வி: இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது?
எப்பொழுதும் வழக்கம் போல் வாழ்ந்து கொண்டே வா. பின்னால் இறைவன் அருளால் அதற்குண்டான சூழல் ஏற்பட்டால் யாமே அது குறித்து கூறுகிறோம்.
கேள்வி: அமாவாசை நாட்களில் கண் தெரிய உதவும் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து
நீ கூறிய அனைத்து மூலிகைகளிலும் சதுரகிரி கொல்லிகிரி மற்றும் பர்வதமலையிலும் இருக்கிறதப்பா. ஆனால் அது யாருக்கு கிட்ட வேண்டுமோ அவனுக்கு தான் அது கிட்டும். இந்த மூலிகை கிடைக்க வேண்டிய வினைப்பயன் இருக்கின்ற மனிதனுக்கு உண்மையில் இந்த மூலிகை குறித்த ஆர்வம் இராது.
இங்கு (பாண்டவ படையில்) சூரர்களும் மிகப்பெரிய வில்வித்தை வீரர்களான பீமன் அர்ஜூனனுக்கு இணையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். யுயுதானன் விராடன் மகாரதனாகிய துருபதன்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுயுதானன் என்பவன் யார்?
சினி என்பவருடைய மகன் யுயுதானன். யாதவ குலத்து அரசன். கிருஷ்ணரைச் சார்ந்தவன். அர்ஜூனனின் சீடன். சாத்யகிக்கு யுயுதானன் என்ற பெயரும் உண்டு. பலம் மிகுந்தவன். இவன் மகாபாரத யுத்தத்தில் இறக்கவில்லை. ரிஷியின் சாபத்தினால் யாதவர்களுக்குள் ஏற்பட்ட யுத்தத்தில் அடிபட்டு இறந்தான்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: விராடன் என்பவன் யார்?
மத்சிய நாட்டு அரசன் விராடன். பாண்டவர்கள் தங்களின் 1 வருட அஞ்ஞாத வாசத்தை இவரது நாட்டில் மறைந்து வாழ்ந்தார்கள். இவருடைய பெண் உத்தரையை அர்ஜூனனுடைய மகன் அபிமன்யு மணந்தான். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: துருபதன் என்பவன் யார்?
புருஷத் என்பவரின் மகன் துருபதன். பாஞ்சால தேசத்து அரசர். துரோணரைக் கொல்ல வேண்டும் என்று யாஜர் உபயாஜர் என்ற இரண்டு ரிஷிகளை வைத்து யாகம் செய்தார். யாகத்தில் தோன்றியவர்கள் பாண்டவர்களின் சேனாதிபதியான திருஷ்டத்யும்னனும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்த திரௌபதியும் ஆவார்கள். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.
கேள்வி: ஒரு வீட்டில் இருக்கும் நபர் ஆத்மஹத்தி (தற்கொலை) செய்து கொண்டால் அந்த ஆத்மா அங்கேதான் திரிந்து கொண்டிருக்குமா?
அது ஆத்மாவிற்கு ஆத்மா மாறுபடும். வாழும்போது அது கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததோ எந்த அளவிற்கு பிராய்ச்சித்தம் செய்து முன்ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதோ எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து இருக்கிறதோ எந்த அளவிற்கு ஆத்ம பலத்தை அதிகரித்துள்ளதோ அதை பொறுத்தே அந்த ஆத்மா செல்லும் தூரமும் காலமும் பரிணாமமும் இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல் சராசரியாக உண்டு உறங்கி ஒரு விலங்கு போல் வாழ்ந்த ஆத்மாவால் உணரவும் முடியாது. வேறு எங்கும் செல்லவும் முடியாது. குறிப்பிட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.
கேள்வி: ஐயனே ராகுகாலம் எமகண்டம் குளிகை காலம் இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?
இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோக ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய போது சேவை கருதி செய்யக்கூடிய சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளைக் கருதி செய்யக்கூடிய காரியங்கள் தர்ம காரியங்கள் வழிபாடுகள் யாகங்கள் ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய லோக ரீதியாக செய்யக்கூடிய செயல்கள் ஒரு இல்லம் வாங்க வேண்டும் ஒரு வாகனம் வாங்க வேண்டும் புதிதாக ஆடை வாங்க வேண்டும் வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.
குரு துரோணரே பாண்டவர்களின் படைகளைப் பாருங்கள். துருபதனின் மகனும் உங்களது புத்திசாலி மாணவனுமாகிய திருஷ்டத்யும்னன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களின் மிகப்பெரிய படைக்கு தலைமையேற்று அணிவகுத்து நிற்கின்றான் பாருங்கள்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டத்யும்னனை ஏன் துருபதனின் மகன் என்றும் புத்திசாலி மாணவன் என்றும் துரியோதனன் கூறுகின்றான்.
பதில்: அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியசாலி துரியோதனன். திருஷ்டத்யும்னன் துரோணரிடம் மாணவனாக சேர்ந்து வித்தைகளை கற்றுக் கொண்டு அவருக்கு எதிராகவே யுத்தம் செய்ய வந்திருக்கிறான் அவனது புத்திசாலித்தனத்தை பாருங்கள். உங்களை திணறடிப்பது போல் அழகான அணிவகுப்பை செய்திருக்கிறான் பாருங்கள் என்று தனது அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியமான வார்த்தைகளினால் துரோணருக்கு கோபத்தை உண்டு செய்கிறான் துரியோதனன். துரோணரை கொல்வதற்காக யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றான் துருபதன். அவனை பாண்டவர்கள் தங்கள் படைக்கு தலைமை சேனாதிபதியாக்கினார்கள். துருபதனின் மேல் ஆரம்பத்தில் துரோணருக்கு இருந்த கோபம் திருஷ்டத்யும்னனின் மேலும் வர வேண்டும் என்பதற்காகவும் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் துரியோதனன் அவ்வாறு கூறினான்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பாண்டவ படைகளின் எண்ணிக்கை ஏழு அக்ரோணி படைகள். கௌரவ படைகளின் எண்ணிக்கை பதினோரு அக்ரோணி படைகள். கௌரவர்களின் படைகளை விட பாண்டவர்களின் படைகளுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது துரியோதனன் ஏன் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.
பதில்: பாண்டவர்களின் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வஜ்ர வியூக அமைப்பில் இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக தெரியும். அடுத்து பாண்டவர்களின் படைகளை மிகவும் சக்தி வாய்ந்த படைகளாக துரியோதனன் எண்ணினான். அதனால் பாண்டவர்களின் படைகளை வெற்றி பெறுவதற்கான வழிகளை துரோணர் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.
ஆத்மாவிற்கு உடலுக்கு உண்டான உணர்வுகள் உண்டே தவிர அந்த உணர்வுகளுக்கு உண்டான தேவைகள் இல்லை. பசிக்கும் ஆனால் உண்ண முடியாது. வலிக்கும் ஆனால் வலியை வெளிப்படுத்த முடியாது. கரங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் கரங்கள் இருப்பது போன்ற ஒரு பிரம்மை இருக்கும். உறவுகளை பார்க்கும் பேசும். ஆனால் அதை உணரும் சக்தி அதன் உறவுகளுக்கு இருக்காது. எனவே இது ஒருவகையான அவஸ்தை. இயற்கையான மரணமோ அல்லது மாறான மரணமோ வாழும் போது மனிதனாக வாழ வேண்டும். பாவத்தை மூட்டை மேல் மூட்டை கட்டி கொண்டவனுக்கு தான் செய்ததெல்லாம் பாவம் என்ற உணர்வு வரும்வரை அதற்குண்டான துன்பமும் அதை திருத்தும் வண்ணம்தான் இறைவன் அவ்வாறு அமைத்திருக்கிறான். யாரையும் தண்டிப்பதோ வேதனைப்படுத்துவதோ அல்ல விதியின் வேலை. உணர்ந்து திருத்தப்பட வேண்டும் என்பதுதான்.