கருடபகவான்

அமிர்த கலசத்திற்காக கருடபகவான் நாகர்களுடன் சண்டையிடும் காட்சி கருட விஷ்ணு கெஞ்சனா பண்பாட்டு பூங்காவில் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ளது.

குடந்தை இராமசாமி கோவில்

கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.

பால கோபாலர்

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் ஹுவினஹதகலியில் அமைந்துள்ள முருதேவரா கோயிலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பால கோபால் சிற்பம் பின்பக்கம் வினாயகர்.

ஸ்ரீ ராமர்

ரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க சிவலிங்கத்தை நிறுவி ஆகம முறைப்படி வழிபட்டார். அனுமன் அருகில் இருந்தார். அப்போது சிவன் பார்வதியுடன் வானில் தோன்றினார். இராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் இதை விளக்கும் சிற்பம்.

லட்சுமி நரசிம்மர்

பெட்டன்னா ஹெகடே சோமன்னா மற்றும் கேஷன்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பூர்வீகவாசிகளிடமிருந்து ஒரு இலவச இடத்தைப் பெற்று கி.பி 1234 இல் கோவிலைக் கட்டினர் என்று கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.