படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. இந்த பத்து திருக்கரங்களில் வேதப் புத்தகம், ஜெபமாலை, கமண்டலம் மற்றும் தாமரை மலர் ஆகியவை ஏந்தப்பட்டுள்ளன. சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருப்பது போல் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளதால் தான் இறைவனுக்கு சரிசமமானவன் என்ற கர்வம் வந்த காரணத்தால் சிவபெருமானால் அந்த ஐந்தாவது தலை கொய்யப்பட்டு நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமானால் பிரம்மாவின் ஐந்தாவது தலை கொய்யப்படுவதற்கு முன்பு பிரம்மன் ஐந்து தலைகளுடன் (பஞ்சமுகன்) படைப்பின் கடவுளாகக் காட்சியளித்த நிலையைக் குறிக்கும் சிற்பம். இந்த சிற்பம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் அதன் நுழைவாயிலில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தூணில் பிரம்மனின் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த தூண் சிற்பங்கள் கிபி 14 முதல் 15 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு அல்லது பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகின்றன.
