ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் சுவாமிகள்

காசியில் சிதம்பர சுவாமிகள் குருகுலத்தில் ஆசிரியர் தன்னுடைய மிகச் சிறந்த மாணவனான முத்துசுவாமியை அழைத்து தம்பி உன்னுடைய கல்வி நிறைவடைந்து விட்டது. நீ திருவாருர் செல். போகும் வழியில் திருத்தணி முருகனை வழிபட்டுச் செல். முருகன் உனக்கு வழி காட்டுவான் என்றார். முத்துசுவாமி தன்னுடைய கல்வி நிறைவு பெற்றதை எப்படி நான் அறிந்து கொள்வது என்று தன் குருவிடம் கேட்டார். அதற்கு குரு கங்கையில் நீராடி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியை நினைத்துக் கொள் உனக்கு பதில் கிடைக்கும் என்றார். நேராக கங்கைக்கு சென்ற முத்துசுவாமி சரஸ்வதியை நினைத்துக் கொண்டே கங்கையில் மூழ்கி எழுந்தான். அப்போது சரஸ்வதி நேரடியாக காட்சி கொடுத்து அழகிய வீணையை பரிசாக கொடுத்தாள். அந்த வீணையின் சிறப்பாக அதில் ராம் என்று வடமொழியில் எழுதி இருந்தது. யாழ் மேல் நோக்கி பார்த்திருந்தது. மகிழ்ச்சி அடைந்த முத்துசுவாமி தான் கல்வியில் நிறைவு பெற்று விட்டோம் என்று எண்ணிக் கொண்டு குரு சொன்ன படி திருத்தணியில் ஒருமண்டலம் தங்கி தியானத்தில் இருக்க முடிவு செய்து அங்கேயே தங்கினார். 40 வது நாள் நாள் ஒரு வயதான பெரியவர் முத்துசுவாமியின் அருகில் வந்து உனது வாயைத் திற என்று சொல்லி வாயில் கற்கண்டைக் கொடுத்து நொடியில் மறைந்து விட்டார்.

முத்து சுவாமியின் வாயிலிருந்து ஶ்ரீ நாதாதி குரு குஹோ ஜயதி ஜயதி என்ற பாடல் பிறந்தது. ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் சுவாமிகள் தனது முதல் பாட்டை முருகன் சன்னிதானத்தில் பாடினார். 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாத சுவாமிகளை தமிழில்பாடச் சொல்லிக் கேட்டு முருகன் மகிழ்ந்தானோ அதுபோலவே தீட்சிதர் சுவாமிகளை வடமொழியில் பாடச்சொல்லி மகிழ்ந்தான் முருகன். தீட்சிதர் சுவாமிகள் 500 மேற்பட்ட பாடல்களை வெவ்வேறு ராகங்களில் இயற்றியிருக்கிறார். முத்து சுவாமி சுவாமிகள் குரு குஹ என்று தன்னுடைய முத்திரையையும் என்ன ராகத்தில் பாடவேண்டும் என்பதற்காக ராகத்தின் பெயரையும் பாடல் வரிகளின் நடுவில் பதித்து இருப்பார்கள். சுவாமிகளின் சீடர் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்த போது சீடரின் ஜாதகத்தைப் பார்த்து அந்த வலி குருப்பெயர்ச்சியால் என்று அறிந்து கொண்டு கிரகஸ்பதே என்று அடாணாவில் குரு பகவானை வாழ்த்தி ஒரு பாடலை இயற்றி சீடரின் வயிற்று வலியை போக்கினார் முத்து சுவாமி சுவாமிகள். தனது சீடரின் வேண்டுகொளுக்கு இணங்க நவகிரக தெய்வங்களுக்கு நவகிரக கீர்த்தனைகள் பல ராகங்களில் முத்து சுவாமி சுவாமிகள் இயற்றினார். ஒரு சமயம் மதுரையிலிருந்து எட்டையாபுரம் நடந்து வரும்போது சாத்தூர் அருகில் ஒரு கிராமத்தில் பல வருடங்களாக மழையில்லாமல் வாடி வதங்கி பூமி பாளம் பாளமாக வெடித்து பாலை வனமாக காட்சி அளித்ததைக் கண்டு மனம் வாடினார். இறைவியை வேண்டி ஆனந்த ம்ருதாக்‌ஷினி என்ற பாடலை அம்ரிதவர்ஷினி ராகத்தில் இயற்றி பாடினார். வருஷய வருஷய வருஷய என்று பாடலை முடிக்கும் போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.