தசபுஜ துர்க்கை

தச புஜ துர்க்கை வெட்டப்பட்ட எருமையின் உடலில் இருந்து வெளிவரும் அரக்கனின் கழுத்தைப் பிடித்து சூலத்தினால் மார்பைப் பிளக்கும் காட்சி. வாள் கேடயம் அம்பு வில் வஜ்ரம் மணி ஆகிய ஆயுதங்களை வலது இடது கரங்களில் ஏந்தி வலது காலை மகிஷாசுரனின் மேல் வைத்து இடது காலை கீழே வைத்துள்ளார். மடிந்த மகிஷாசுரனின் எருமைத் தலை தனியே துண்டாக கீழே கிடக்க துர்கையின் சிம்ம வாகனமும் பின்னால் இருந்து கடித்து குதற சீறிப் பாய்ந்து வருகிறது. இடம் ஜோத்பூர் மாவட்டம். ராஜஸ்தான்

விஷ்ணுதுர்க்கை

20 கரங்களில் எண்ணற்ற ஆயுதங்களுடன் சம்ஹாரம் செய்யப்பட மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை. இடம்: ஸ்ரீவனதுர்கை பீடம் இறைவன்காடு வேலூர் மாவட்டம்.

காளி

இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.

காளி மரச்சிற்பம்

எட்டு கரங்களைக் கொண்ட காளி தேவி ஈசனுக்கே உரியதான சந்திரப்பிறைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். இங்கே இவள் தீயவற்றை அழிக்க கோபத்துடன் பார்க்கும் கண்கள் மற்றும் கோரைப் பற்களுடன் காட்சியளிக்கின்றாள். தேவி அணிந்துள்ள காதணிகளில் வலது காதில் சிங்கத்தையும் இடது காதில் யானையையும் அணிந்திருக்கிறாள். ஒவ்வொரு கைகளிலும் அரிவாள் வில் அம்பு ஈட்டி மண்டை ஓடு சுடர்விடும் ரத்தினம் என்று தமிழில் அறியப்படும் அரிவாள் வடிவ பலி வாள் ஏந்தியிருக்கிறாள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மரத்தில் செதுக்கப்பட்ட காளி தேவியின் சிலை தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரம் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதிதேவி

மணல் கல்லிலான முப்பெரும் தேவியர்களின் ஒருவரான சரஸ்வதிதேவியின் சிற்பம். நேபாளத்தை சேர்ந்த இந்த சிற்பம் 10 மற்றும் 11 நூற்றாண்டை சேர்ந்தது. தற்போது இருக்கும் இடம்: வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம். பால்டிமோர் ஆசிய கலை அருங்காட்சியகம் சான்பிரான்சிஸ்கோ.

வாராஹிதேவி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயிலில் அன்னை வாராஹிதேவி. நான்கு கரங்களில் பின் இருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படியும் சாந்தமே உருவாக கையில் குழந்தையுடன் அன்னை காட்சியளிக்கின்றாள்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்

புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.