மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

மல்லிகைப்பூ வச்சு முல்லைப்பூ செவ்வந்திப்பூ கொன்றை அப்புறம் தாழம்பூ பட்டை என்று பல பூக்களால் சிவனுக்கு சிகை அலங்காராம் இருக்கும் இங்கு நாகத்தை ஜடையா வைத்து சிகை அலங்காரம் பின்னப்பட்டிருக்கிறது. இடம்: விழுப்புரம் மாவட்டம்


தாமரை பீடத்துடன் கூடிய பெரிய கல்பீடத்தின் மீது உமாமகேஸ்வரர் தோற்றத்தில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இரண்டு பறக்கும் வித்யாதரர்களுடன் காட்சி அளிக்கின்றார். இடம் கல்லேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

ஹாவேரியில் உள்ள சித்தேசுவரன் கோவிலின் ஷிகாராவில் 11ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கிய சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தியான நிலையில் உள்ள சிவன். இடம் சித்தேசுவரன் கோவில். ஆவேரி மாவட்டம். கர்நாடக மாநிலம்.

25 முகங்கள் 75 கண்கள் மற்றும் 50 கைகளுடன் மகாசாதசிவா இடம் ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கோபுரம் சுசீந்திரம்.

பழமையான சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழமையான சிவலிங்கம்.

ஸ்ரீதிரிபுவன சித்தர் தாமரை மலரில் உருவாக்கிய சிவலிங்கம்

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.

ஜப்பான் நகோயாவில் உள்ள தொகன்ஜி கோவிலில் உள்ள சிவலிங்கம்

சிவபெருமானின் தொண்டையில் விஷத்தை தடுத்த பார்வதி தேவி இடம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்குடி ஸ்ரீ கண்டேஸ்வரர் சன்னதி
