அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பவராகும். கைலாயத்தில் வாயில் காவலாக நின்றிருக்கும் நந்திக்கு சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால் இவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலின் கோபுர நுழைவாயிலில் உள்ள அதிகாரநந்தி குரங்கு போன்ற முகத்துடனும் மனிதனைப் போன்ற உடல்வாகுடனும் நுணுக்கமான ஆபரணங்கள் மற்றும் பாரம்பரிய உடைகளால் அலங்கரிக்கப்பட்டவராகச் செதுக்கப்பட்டுள்ளார். இந்தக் குறிப்பிட்ட வடிவம் சிவபெருமானின் வாசலைக் காக்கும் காவலராக நந்தி அதிகார நிலையில் இருப்பதைச் சித்தரிக்கிறது.

