திரிபுரைசக்தி

சிவபெருமான் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர். சிவ அர்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். இந்த பணிக்கு அவர்களுக்கு வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல சக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அனைத்து பைரவ பைரவி சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குகிறார்கள். ஸ்தூல சூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர்.

திரிபுரைசக்தி மற்றும் பைரவர் பைரவி பற்றிய முழுமையான கருத்துக்கள் அனைத்தும் திருமந்திரத்தில் உள்ளது. இந்த பைரவி அருள்பாலிக்கும் இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.