வாசுகி நர்த்தனர்

சிவபெருமான் வாசுகி பாம்பின் மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி அனைவரையும் பயமுறுத்திய வாசுகியின் தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாடனம் ஆடினார். ஈசனின் நடன வேகத்தால் நிலை குலைந்த வாசுகி ஆணவம் நீங்கி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் ஈசன் வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார். பத்துத் திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தி இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்கள் உள்ளது. மற்ற இரு திருக்கரங்களில் மான் மழு யோக முத்திரைகளோடு அருள் காட்சி தருகிறார் ஈசன். இடம் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதீஸ்வரர் ஆலயம் மேலக்கோட்டையூர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.