ராமரின் ரகுவம்சம்

ராமருக்கு அகஸ்தியர் முனிவர் பரிசாக கொடுத்த விலைமதிப்பற்ற கற்களை கொடுத்தார். அது குசாவிடம் இருந்தது. அந்த கற்களை நாகர்கள் திருடி சென்ற காரணத்தால் குசா அவர்களை கொலை செய்ய முயற்சித்தார். அப்போது துர்ஜயா எனும் அரக்கனுடன் போரிடும் போது குசா இறந்தான். குசாவின் மரணத்திற்கு பிறகு குசா மற்றும் கும்தவதி என்பவளுக்கும் பிறந்த அதிதி மன்னராக பதிவு ஏற்றுள்ளார். அதிதி தனது முன்னோர்கள் போல சிறந்த மன்னராகவும் தலைசிறந்த போர் வீரனாகவும் திகழ்ந்துள்ளார். அதிதி வசிஷ்டர் முனிவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அதிதியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் நிஷதா மன்னர் பதவி வகித்தார். தனது தந்தை அதிதியை போலவே நிஷத்தும் சிறந்த போர் வீரராக திகழ்ந்தார். இவருக்கு பிறகு நலா எனும் மிகச்சிறந்த போர்வீரன் மன்னர் பதவி வகித்தார். இவர் முனிவர்களுடன் காடுகளில் சென்று வாழ திட்டமிட்டு தனது மகன் நபாவை அரசராக்கி செல்கிறார். நபா கோசல தேசத்தை ஆண்டு வந்தார். இவரை எதிர்த்து புந்தரிகா போரிட்டார். இதன் பிறகு புந்தரிகாவின் மகன் க்ஷீமா எனும் போர் வீரன் பதிவியேற்றான். இவர் தேவா எனும் படைக்கு தலைவனாக இருந்த காரணத்தால் தேவநீகன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மகன் அகிநாகு என்பவர் உலகியே ஆண்டதாகவும் புகழ் பாடப்பட்டுள்ளது. இவரை எதிரிகளும் கூட விரும்பினார்கள் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு நபியின் மகன் வஜ்ரானபா. வஜ்ரானபாவின் மகன் சங்கத். சங்கத்திற்கு பிறகு ஹரிதஷ்வா. இவர்களை பின்தொடர்ந்து விஷ்வா சஹா, ஹிரண்ய நபா, கௌசல்யா, பிரமிஷ்தா, புத்ரா, புஷ்யா, துர்வ சந்திசுதர்ஷனா மற்றும் அக்னி வர்ணா போன்றவர்கள் அரசராக திகழ்ந்துள்ளனர். இவர்களுடன் ரகுவம்சம் முடிவுற்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.