கோதண்டராமர்

ராமருக்கு உதவி செய்வதற்காக விபீஷணன் ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமர் இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு கோதண்டராமர் என்று பெயர். இவரது அருகில் அனுமனும் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்கள். விபீஷணனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் வங்காளவிரிகுடா மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.