செந்தூரம்

ராமரின் அரசவைக்கு செல்ல சீதை தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார். சீதையை அரசவைக்கு அழைத்துச் செல்ல ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்டார். சீதையும் கேள் என்றாள். நீங்கள் ஏன் தினசரி உங்கள் நெற்றி வகிட்டில் செந்தூரத்தை வைத்துக் கொள்கிறீர்கள் அது ஏன் என்று கேட்டார். என் கணவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக வைத்துக் கொள்கிறேன் என்றாள் சீதை. அனுமன் சீதையை அரசவையில் விட்டு விட்டு. நான் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அனுமன் சில நிமிடங்கள் கழித்து தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்தார். அனுமா இது என்ன கோலம் என்று ராமர் கேட்டார். அதற்கு அனுமன் அன்னை நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு செந்தூரம் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான் தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை தினமும் பூசிக் கொண்டேன் என்றார். இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.