ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார். அப்போது சுந்தர காண்டத்திற்கு அனுமன் என்று பெயரை சூட்டினார். அதற்கு அனுமன் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வால்மீகி முனிவர் தனது சமயோசிதத்தால் சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார். அனுமன் அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று அங்கிருந்து கிளம்பி தன் அன்னை அஞ்சனா தேவியை பார்க்கச் சென்றார். தன் மகன் அனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள். அனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே தாங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அஞ்சனா தேவி உனது உனது பால்ய பருவத்து பெயர் சுந்தரன் தானை மறந்து விட்டாயா என்று சொல்லி பலகாரம் செய்ய செல்கிறேன் என்று உள்ளே சென்று விட்டார். தன் பெயரை வால்மீகி எனக்கே தெரியாமல் வைத்துவிட்டாரே என்று அப்போது தான் அனுமானுக்கு புரிந்தது.
சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடைவார்கள் என்று பல மகான்கள் அருளியுள்ளார்கள்.
