பூதேஸ்வர் மகாதேவ்

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள காரியாபந்த் என்னும் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராம் மரோடா. காட்டுப் பகுதியில் உள்ளது. இந்த காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கம் வளரும் சக்தி கொண்டதாக ஆண்டிற்கு ஆண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது. உயரத்திலும் சரி அகலத்திலும் சரி இதன் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்சமயம் இது 18 அடி உயரமும் 20 அகலமும் உள்ளது. இந்த சிவலிங்கத்தின் அளவு வருடாவருடம் மஹாசிவராத்திரி அன்று வருவாய் துறை அதிகாரிகளால் அளக்கப்படுகிறது. அப்போதும் 6 முதல் 8 இன்ச் வரை இந்த சிவலிங்கம் வளர்ந்திருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுவரை அதன் உயரமும் அகலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. சிவலிங்கம் எப்படி வளர்கிறது? கல்லால் ஆனா சிவலிங்கம் எப்படி வருடா வருடம் வளர முடியும்.? இதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம் தான் என்ன.? இப்படி பல கேள்விகளுக்கான விடையை இன்று வரை யாராலும் அறியமுடியவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.