முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

யுதிஷ்டிரரின் நாட்டை ஆட்சி செய்யும் போது நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். எவருக்கேனும் கேள்விகளோ பிரச்சனைகளோ இருந்தால் பீமனிடம் முதலில் உதவி நாடி வந்தனர். ஒரு நாள் விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும் அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு அவனது வலிமையினால் சாதாரணமாக இருந்தது. இந்த புதிய சிக்கலான விஷயமாக இருப்பதினால் பீமன் அவனை யுதிஷ்டிரரிடம் செல் என்று கூறினார்.

அதே தினத்தில் இன்னொரு மனிதன் வந்து தன்னுடைய பிரச்சணையை சொன்னான். ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதனை நான்கு சிறிய பானைகளில் நிரப்பினால் நிரம்புகிறது. மீண்டும் நான்கு சிறிய பானை தண்ணீரை பெரிய பானைக்குள் நிரப்பிய போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது பெரிய பானை நிரம்பவில்லை. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன் அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விட்டது என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை. ஆனால் ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து அப்பாறையை நகர்த்தினார். இது எப்படி என்று காரணத்தை கேட்டான். இந்த மனிதனையும் யுதிஷ்டிரரிடம் அனுப்பினார் பீமன். இப்போது இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் விடை தெரிந்துகொள்ள பீமனிடம் ஆர்வம் வந்தது. யுதிஸ்டிரர் என்ன பதில் கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ள அவைக்கு சென்றார்.

நால்வரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர் இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி கீழ்கண்டவாறு விளக்கினார்.

ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில் மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால் அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில் தாயானவள் தனது குழந்தைக்கு செலுத்தும் அன்பு கருணையை ஒப்பிடும் போது மகன்கள் பெரியவர்கள் ஆனதும் நால்வரும் சேர்ந்து தாயிடம் காட்டும் அன்பு தாய் காட்டும் அன்பிற்கு நிகரானதாக இல்லை. கலியுகத்தில் தாய் கொடுக்கும் அன்பு குழந்தைகளை நிரப்புகிறது. குழந்தைகளை காட்டும் அன்பு தாயின் அன்புக்கு நிகரானதாக இல்லை.

ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில் மனிதர்கள் தங்களின் வருமானம் வலிமை வளம் போன்றவற்றை குடும்பம் நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக யானையின் உடம்பின் அளவிற்கு செலவழிக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் கடவுளுக்கோ கடவுளின் சேவைகளுக்கோ தான தர்மத்திற்கோ யானையின் வாலலவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை என்றார்.

ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில் ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம் எவ்வளவு வலிமையான வினைகள் ஆனாலும் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது என்றார்.

யுதிஷ்டிரரின் இந்த பதிலைக் கேட்ட நால்வரும் பீமனும் திருப்தியுடன் திரும்பினார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.