கிருஷ்ண லீலை

ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது ஏகாதசி அன்று கிருஷ்ணர் நீண்ட நாட்களாக வரவேயில்லையே என்று எண்ணினாள். அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் என்று சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது குடிலின் வாயிலில் நின்று அத்தை என்று கிருஷ்ணர் கூப்பிட்டார். குந்திதேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு என்று அன்போடு வரவேற்றார்.

அத்தை நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன். பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது என்றார் கிருஷ்ணர். உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தாள். அனைவரும் எங்கை என குந்திதேவியிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கிருஷ்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்றாள். அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள் காட்டில் இருக்கின்றார்கள். இன்னும் சில காலம் தான் அத்தை எல்லாம் மாறும் என்றார். குந்திதேவி கர்ம வினையை அனுபவிக்கிறோம். எப்பொழுது நீ எங்களுடன் இருப்பதே எங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக இருக்கிறோம். எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன் இதோ ஒரு நிமிடம் என்று பாதி பாயசத்தை தனக்கும் தன் புதல்வர்களுக்கும் திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கிருஷ்ணருக்கு எடுத்து வந்தார் குந்திதேவி. கிருஷ்ண பரமாத்மா புன்சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து ஆஹா என்ன சுவை அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான். எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும் எனக் கேட்டார். தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்திதேவி செய்வதறியாமல் புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் கொடுத்தாள். அதை வாங்கிய கிருஷ்ணர் கொடு என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு இப்போதுதான் திருப்தியானேன் என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

குந்திதேவி கிருஷ்ணா என் புதல்வர்களுக்கு ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே. நான் எதேனும் தவறு செய்து விட்டேனா என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி குரலில் வந்தது. அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன். என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா. உள்ளே சென்று பார் நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும் தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன். இதுவும் என் லீலைதான் என்றது கிருஷ்ணரின் குரல் அசிரீரீயாக. இதைக்கேட்ட குந்திதேவி ஆனந்தக் கண்ணீருடன் பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்தேன். என்னை மன்னித்துவிடு என்று கூறி உள்ளே சென்று பாயசத்தை எடுத்து கிருஷ்ணா என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள். பீமனுக்கு ஒரே சந்தோஷம் தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.