தானத்தில் சிறந்தவர்

ஒரு முறை பாண்டவர்கள் தங்களில் மூத்தவரான யுதிஷ்டிரரையும் அவரது கொடைத் தன்மையையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர் கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார். யுதிஷ்டிரரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன் என்றார். என் மேல் வருத்தப் பட வேண்டாம் நாளை நிரூபிக்கிறேன் என்றார். பொழுது விடிந்தது. என்னுடன் வாருங்கள் என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார். பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து இன்று சூரிய அஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும் என்றார்.

இவ்வளவுதானா என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி அனைவரையும் வரச்செய்து அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கத் துவங்கினார்கள். போவோர் வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி கூப்பிட்டு கூப்பிட்டு தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர். பொழுதும் சாய்கிறது. மலை கால்வாசி கூட கரைந்த பாடில்லை. பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி. யுதிஷ்டிரர் சோர்ந்து போய்ச் சொன்னார். கிருஷ்ணா தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எங்களால் ஒரு மலையில் கால்வாசி கூட கொடுக்க முடியவில்லை. அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார். கர்ணா இந்த இரண்டு தங்க மலைகளையும் பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன கிருஷ்ணா என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன். காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால்வாசிதான் கொடுக்க முடிந்திருக்கிறது. இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க நேரம் நகர்கிறது. இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது. அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான். இந்தா இந்த இரண்டு மலைகளையும் நீயே வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான். சூரியன் மறைந்தது. கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

கிருஷ்ணன் பாண்டவர்களிடம் இந்த மலையை முழுவதும் தானமாக தரவேண்டும் என்றதும் இது நம்முடையது என்ற எண்ணமும் தங்களால் அவைகளை முழுமையாக தரமுடியும் என்ற மமதையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலையை வெட்டி எடுத்து கொடுத்தார்கள். ஆனால் கர்ணனனிடம் மமதை இல்லை. மேலும் தானம் செய்ய வேண்டும் எண்ணம் மட்டுமே இருந்தது அதை எப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.