தசரதர் 60000 பெண்களை திருமணம் செய்தது ஏன்?

வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான காமதேனுவை தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட கார்த்தவீர்யாஜுனன் என்ற அரசன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும் அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் புதல்வர் பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டு வந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார். கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக்கொன்றார்கள். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.

அயோத்திய நகரை அப்போது ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும் பரசுராமரின் போர்திறன் தவசக்தி மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்று அறிந்து வைத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தீர்க்க வழி தேடினார். புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். பரசுராமரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தசரதர் ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார். பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும் அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்காமல் இருக்க பரசுராமர் பார்வையில் படும் போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார். தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவை செய்யும் பொருட்டு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரதசக்கரவர்த்தி இத்தனை திருமணம் புரிந்தார்.

3 thoughts on “தசரதர் 60000 பெண்களை திருமணம் செய்தது ஏன்?

  1. Natarajan Parameswaran Reply

    அருமையான விளக்கம் இது…

  2. Karthikeyan.R Reply

    தவறான விளக்கம்

    • Saravanan Thirumoolar Post authorReply

      சரியான விளக்கத்தை தாங்கள் சொல்லுங்கள். யாம் தெரிந்து கொள்கிறோம்.

Leave a Reply to Karthikeyan.RCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.