யாருடைய துன்பம் அதிகம்

பாண்டவர்மார்கள் திரௌபதியுடன் வனவாச காலத்தில் காம்யகவனம் என்கிற வனத்தில் தங்கியிருந்தனர். பாண்டவர்களுக்கு தங்களப் போல் துன்பத்தை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. துன்பத்தின் உச்சத்தை தாங்கள் அனுபவிக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அப்போது சிவனிடம் வரம்பெற்று என்றும் சிரஞ்சீவி ஆக என்றென்றும் பதினாறு வயது என்ற வரத்தைப் பெற்ற பதினாறு வயதிலேயே இருக்கும் மார்கண்டேயர் அங்கே வந்தார். பாண்டவர்களை ஆசிர்வாதம் செய்தார். அப்போது யுதிஷ்டிரர் அவரை பார்த்து எங்களைபோல் இந்த உலகத்தில் துக்கங்களை அனுபவிப்பர்கள் யாராவது உண்டா? என்று கேட்டார். அதற்கு மார்கண்டேயரோ சிரித்துகொண்டே பேச ஆரம்பித்தார். ஒரு புறாவிற்காக தன்னுடைய உடல் பாகங்களை அறுத்தெடுத்து கொடுத்தவர் சிபிசக்கரவர்த்தி. அவரின் புத்திரன் அஜன் அவரின் புத்திரன் பத்து குதிரைகளையும் ஒரே நேரத்தில் பூட்டிகொண்டு தேரை செலுத்தும் அயோத்தி மகாராஜா தசரதன். அவரின் புத்திரனாகிய இராமர் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை பார்க்கும்போது உங்களின் துன்பங்கள் மிகவும் குறைவுதான் என்று சொல்லி முழு இராமயணத்தையும் பாண்டவர்களிடம் சொன்னார். இராமாயணம் முழுமையாக கேட்ட பாண்டவர்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை பார்க்கும்போது தாங்கள் அனுபவிக்கும் துன்பமெல்லாம் ஒன்றும் இல்லை என்ற மனத் தெளிவில் துவைதவனம் என்கிற வனத்தில் வனவாசத்தை தொடர தங்களின் பயணத்தை தொடர்ந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.