சுலோகம் -32

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #32

கிருஷ்ணா நான் இந்த வெற்றியை விரும்பவில்லை ராஜ்யத்தையும் விரும்பவில்லை சுகங்களையும் விரும்பவில்லை கோவிந்தா நமக்கு இத்தகைய ராஜ்யங்களால் என்ன பயன்? இத்தனை சுகபோகங்களோடு உயிரோடு வாழ்வதில் என்ன பயன்?

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் உயிரோடு இருந்து பெறும் வெற்றியையும் ராஜ்யத்தையும் ஏன் விரும்பவில்லை?

வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் ராஜ்யத்தையும் சுகபோகங்களையும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக அனுபவிக்கும் போது இன்பம் இருக்காது துயரம் மட்டுமே இருக்கும். இந்த துயரம் இறுதிக் காலத்திற்கு பிறகு மேலுலகம் சென்றாலும் தொடரும் என்று அர்ஜூனன் நினைக்கின்றான். அதனால் உயிரோடு இருக்கும் போது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாத வெற்றியும் ராஜ்யமும் சுகபோகங்களும் இருந்தும் பயனில்லாத காரணத்தினால் அர்ஜூனன் இவற்றை விரும்பவில்லை.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கோவிந்தா என்ற சொல்லுக்கு இந்திரியங்களை அடக்கி ஆளுகின்றவன் என்று பொருள். அர்ஜூனன் மன குழப்பத்தில் இருக்கும் போது அவனது இந்திரியங்கள் அடங்காமல் இருக்கிறது. கிருஷ்ணர் குழப்பம் இல்லாமல் தன் இந்திரியங்களை அடக்கி அமைதியாக இருப்பதால் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.