சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 272 வது தேவாரத்தலம் திருஅநேகதங்காவதம் என்னும் கௌரிகுண்டம். மூலவர் அநேகதங்காவதநாதர். இங்கு இறைவன் சுயம்பு மலையாக அருளுகிறார் அம்பாள் மனோன்மணி. தீர்த்தம் கௌரிதீர்த்தம். கௌரி என்னும் பெயரில் அம்பாள் இங்கு தவம் செய்துள்ளார். இங்கு கோயில் இல்லை. இமயமலையின் ஒரு பகுதியே வணங்கப்படுகிறது. திருக்கேதாரத்துக்கு செல்லும் வழியில் அலகந்தா பிண்டாரியுடன் விஷ்ணு கங்கை மந்தாகினியுடன் கூடும் இடம் இவ்விடம் ஆகும். ரிஷிகேசத்தில் இருந்து 84 கி.மீ. தூரம். பனி படர்ந்த பெரும் மலைப் பிரதேசம் ஆகும். திருஅநேகதங்காவதம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளது. அம்பாள், சந்திரன், சூரியன் வழிபட்டுள்ளனர். கௌரி என்னும் பெயரில் அம்பாள் இங்கு ஒற்றைக்காலில் தவம் செய்யும் சிற்பம் உள்ளது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார்.
