பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-31
எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக சிரத்தை உடையவர்களாக என்னுடைய கொள்கையை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குற்றம் குறைகள் சொல்லாமல் சிரத்தையுடன் நம்பிக்கையுடன் பின்பற்றி நடப்பவர்கள் அனைவரும் தங்களது அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
