ராம நாமம்

ஒரு பேரரசர் இருந்தார். அவரது ராஜ்ஜூயத்தின் கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. அவர் தன் மந்திரியுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அரசருக்கு மந்திரி எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவர் எங்கு சென்றாலும் மந்திரியையும் உடனே அழைத்துச் செல்வார். மந்திரிக்கு வேட்டையாடுவதில் விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாதலால் அவருடன் சென்றார். மந்திரி மகா பக்திமான். செல்லும் இடமெல்லாம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்லிக் கொண்டே இருந்தார். காட்டில் இருவரும் நீண்ட தூரம் அடர்ந்த காட்டிற்குள் சென்றும் மிருகங்கள் கண்ணில் படவில்லை. அலைச்சலில் இருவரும் மிகவும் களைத்துப் போனார்கள். கொண்டு வந்த நீரும் காலியானது. இருவருக்கும் பசி ஆரம்பித்தது. அப்போது தூரத்தில் சிறிய குடிசை ஒன்று தெரிந்தது.

அரசர் மந்திரியிடம் நாம் இருவரும் ரொம்ப களைப்பா பசியோட இருக்கோம். அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம் வா என்றார். மந்திரி அரசரிடம் எனக்கும் பசிதான் மிகவும் களைப்புதான். ஆனால் நான் அங்கு வரவில்லை. இப்போது சூரியன் மறையும் நேரம் நான் ராம நாமம் ஜெபிக்கும் நேரம். ஆகவே நான் இங்கேயே இந்த மரத்தடியில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னுடைய களைப்பையும் பசியையும் ஆற்றிடும். நீங்கள் சென்று பசியாறி வாருங்கள் என்றார். அரசருக்கு மந்திரி மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் என்று அந்த குடிசைக்கு நடந்து போனார். அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கிருந்த பாட்டியிடம் அரசன் தான் யார் என்றும் தனக்கு உணவு வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டார். அன்று காலையில் சமைத்த உணவை அரசருக்கு பாட்டி கொடுத்தாள். அரசர் திருப்தியாக தனது பசியாரும் வரை சாப்பிட்டார். மீண்டும் பாட்டியை அழைத்த அரசன் இந்த காட்டிற்கு தன்னுடன் மந்திரியும் என்னுடன் வந்தார். அவரும் பசியுடன் மரத்தடியில் இருப்பதால் அவருக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உணவு தீர்ந்து விட்டதாகவும் நான் உடனடியாக சமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லிய பாட்டி விரைவாக அறுசுவை உணவையும் சமைத்து கொடுத்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.