ஆலயம்

ஆலயம் எதற்கு ?

சுவாமி விவேகானந்தர் ஆலயம் பற்றி ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான். ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டான்.

அதற்கு விவேகானந்தர் இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டார். அவன் ஓடிப் போய் ஒரு குவளை நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான். இதனை பார்த்த விவேகானந்தர் நான் தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த குவளை. இந்த குவளை இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா என்று கேட்டார். அவன் குழம்பிப் போனான் அது எப்படி முடியும் சுவாமி என்று கேட்டான்.

நீ கேட்ட கேள்விக்கு இது தான் பதில் தண்ணீரைக் கொண்டுவர குவளை தேவைப் படுவது போல ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும் அதுதான் ஆலயம். குவளை எப்பொதும் தண்ணீர் ஆகாது. அதுபோல் ஆலயமே ஆண்டவனாகாது என்று பதில் அளித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.