கர்மா

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது ஆகும். அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் காரணமாக இந்த பிறவியில் நம்முடனே வரும் கர்ம வினையாகும். பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை ஆகும். இந்த கர்மா சிறிதாக இருந்தால் அதனால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும். பெரிதாக இருந்தால் அடுத்த பிறவியிலும் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியது இருக்கும். மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது ஆகும். இவ்விதம் மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். மனிதன் தாம் வாழும் காலத்தில் மெய், வாய், கண், காது, மூக்கு என ஐந்து புலன்களால் தூண்டப்பட்டு இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது கர்மவினைகள் உண்டாகிறது. முதலாவதாக எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையிலேயே அதனை தீர்க்க முடியும். இரண்டாவதாக நம் கர்ம வினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டவர் இறைவன் ஒருவரே. முதலில் நாம்முடைய கர்ம வினைகள் நீங்க இறைவனை பற்ற வேண்டும். இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவை

  1. யாதனம் – கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
  2. சிரவணம் – இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
  3. கீர்த்தனம் – இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி பஜனைகள் மூலம் கூட்டுப்பிரார்தனை செய்தல்.
  4. பூஜார்தனம் – அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
  5. ஸ்துதி – இறைவனை போற்றி தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை சிரத்தையுடன் செய்து வர நாம் அனுபவிக்கும் கர்ம வினைகள் அனைத்தும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிதளவு துன்பத்துடன் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.