புத்தர்

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர் முதியவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முதியவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்களுக்கு பைத்தியமா தெய்வத்தையே எரித்து விட்டீர்களே என்று கோபத்தில் கதறினார். உடனே முதியவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன கிளருகின்றீர்கள் என்று குரு கேட்டதற்கு முதியவர் புத்தரை எரித்து விட்டதாக சொன்னீர்களே அவரின் எலும்புகளைத் தேடுகிறேன் என்றார். புத்தரை எரித்து விட்டு இப்படி செய்கின்றீர்களே என்று கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். மறுநாள் காலை முதியவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.

முதியவர் இரவு எரிந்த மரபுத்தர் சாம்பல் மீது பூக்களைத் தூவி புத்தம் சரணம் கச்சாமி என்று பிரார்த்தனை செய்து கீழே விழுந்து வணங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தார். குரு அவர் அருகே சென்று என்ன செய்கிறீர்கள் இப்போது சாம்பலை வழிபாடு செய்து கொண்டிருக்கின்றீர்கள். இரவு வணங்க வேண்டிய புத்தரை எரித்து விட்டீர்கள். உங்களுக்கு மனநிலை சரியில்லையா என்று கேட்டார்.

முதியவர் குருவை பார்த்து நீங்கள் தானே இரவு இவர் புத்தர் என்று சொன்னீர்கள் ஆகையால் அவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். இரவு மரத்தில் புத்தராக இருந்தார் இப்போது சாம்பலாக இருக்கின்றார் அவ்வளவு தானே வித்யாசம் என்றார். புத்தர் உருவ வழிபாடு வேண்டாம் என்றார். இன்று நீங்கள் அவரின் உருவத்தை வைத்து வணங்கி இறுதியில் அவரின் கொள்கைகளை விட்டுவிட்டீர்கள். நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரத்திலான புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்கள் என்றார். குருவுக்கு தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது.

One thought on “புத்தர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.