அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு பொருளானது தற்போது வசதியின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. பொருள் செல்வம் இல்லாதவன் மற்றும் திறமை அற்றவன் ஆகியோர் அதிஷ்டம் இல்லாதவனாக பார்க்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
உண்மை பொருள்:
அதிர்ஷ்டம் என்பற்கு பார்க்கக் கூடிய அல்லது பார்ப்பதைக் குறிக்கிறது. யாராலும் பார்க்க முடியாததை பார்ப்பவனே அதிர்ஷ்டசாலி ஆகின்றான். திருஷ்டி என்ற வார்த்தை உண்டு. பார்ப்பதை குறிப்பதால் தான் திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்கிறார்கள். பார்த்த விஷயங்களையே பார்த்துப் பார்த்து அது நம் நினைவுகளில் சுவடுகளாக பதிவாகிவிடும். இந்த பதிவு அழியும் வரை அது அழியாத திருஷ்டியாக அப்படியே இருக்கும். கண்கள் பார்த்ததை மட்டுமே நம்புவதால் தன்னிடம் இல்லாத பொருள் இன்னொருவரிடம் இருப்பதை பார்க்கும் போது அது தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமும் வைத்திருப்பவர் மீது பொறாமையும் ஏற்படுகிறது. ஆகவே இதன் பொருள் திருஷ்டி ஆகும். இதன் பொருள் அதிஷ்டம் கிடையாது.
அதிர்ஷ்டம் என்றால் இதுவரை பார்க்காத பார்வைக்கு புலனாகாத விஷயம் என்று பொருள்படும். அப்படியொன்று ஒருவனுடைய வாழ்வில் கண்களுக்கு புலப்பட்டால் அனுபவமாக உணரப்படுமானால் கேட்கப்படுமானால் அவன் அதிர்ஷ்டமுடையவன் ஆகின்றன். இந்த அதிஷ்டம் ஒருவனுக்கு வாய்க்க வேண்டுமானால் ஞான குருவின் வழிகாட்டுதலின் மூலமாகவே கிடைக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஞான குருவைப் பெற்றவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி ஆவான்.
அனாதை
அனாதை என்ற வார்த்தைக்கு தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் இல்லாதவர்கள் ஆகியோர்களை உலக ரீதியாக அனாதை என்ற சொல்லைப் பயன்படுத்ததி பார்க்கப்படுகிறது.
உண்மைப் பொருள்:
குருவை அடையாத ஒருவனை அனாதை ஆவான். அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் குருவை அடையாதவன் என்று பொருள். குரு சீடனுக்கு வழிகாட்டி அறிவை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் தீட்சை வழங்கி ஆத்ம ஞானத்தை ஊட்டி முக்தியடைய வழிகாட்டுபவராகவும் இறைவனை உணர வைப்பவராகவும் இருக்கிறார். எத்தனை உறவு முறைகள் சொந்த பந்தங்கள் இருந்தாலும் குருவை அடையாதவனே அனாதை ஆவான். ஏனெனில் எந்தனை சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு நாள் அனைத்து சொந்த பந்தங்களும் பிரிந்து அழிந்து போகும். சொந்த பந்தங்கள் நிலையற்றது ஆகும். ஆனால் ஞான குருவை பெற்றவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனை சென்று அடையும் வரை நிலையாக இந்த குரு சீடன் உறவு இருந்து கொண்டே இருக்கும். குருவானவர் சீடனுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார்.
