மகிழ்ச்சி

கடவுள் ஏன் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்று சீடர் ஒருவர் குருவிடம் கேட்டான். அதற்கு குரு கடவுள் எல்லோரையும் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். இருப்பதை விட்டு இல்லாததை நினைத்துக்கொண்டு எண்ணம்தான் மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றார். சீடருக்கு புரியவில்லை விழித்தான்.

குரு அங்கிருக்கும் பாதி தண்ணீர் இருக்கும் டம்ளரைக் காட்டி இது என்ன என்று கேட்டார். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று சீடர் பதில் சொன்னான். உடனே குரு பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்பவன் நிறையைக் காண்கிறேன். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்பவன் குறையைக் காண்கிறான். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி. மக்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் மக்களுடைய வாழ்க்கையாக பிரதிபலிக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் கிடையாது அனைத்தும் மாயை என விளக்கினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.