யார் துறவி – எது துறவு

மகாபெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள். ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும் இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க பக்தர்கள் தீர்மானித்திருந்தனர். இதுபற்றிய செய்தி பெரியவரை வந்தடைந்தது உடனே அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அந்த தேரத்தில் யார் துறவி – எது துறவு என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஸ்தாபனத்திற்கு பலம் என்று ஒன்று அதிகமாகி விட்டால் அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவன் ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கிகள். அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட ஒரு இடம் இருக்க வேண்டாமென்று ஊர்ஊராக செல்லும் படி சாஸ்திரம் கூறியுள்ளது. ஆனாலும் சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை என்றுதான் கூற வேண்டும். தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது அவனது ஆன்ம தபோ பலத்தை விட பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன்.

உத்தமமா மடத்தை பார்த்துக்கொள்வது அவன்தான் பணமல்ல. எனவே எப்போதும் செலவுக்கு மேலே பணம் சேராதபடியே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வாகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி மடத்தின் நிதியை அதிகரிக்க கூடாது என்று கருதுகிறேன். சுவாமி தடுத்து விட்டாரே என நீங்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. மடத்திற்கு நெருக்கடி ஏற்படும்போது உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம் என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.