சித்தி

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து மகனே பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார் திருவடியை அடைய வழி சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.

One thought on “சித்தி

  1. P Gajendrababu Reply

    sir you opened my eyes now only understood how to reach god

Leave a Reply to P GajendrababuCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.